45 சிங்கப்பெண்

1K 60 7
                                    

45 சிங்கப்பெண்

ருத்ரனுக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தது. தன் பற்களை நரநரவென கடித்தான். இந்த மனிதன் யார், சக்தியை தன்னுடன் வந்துவிடும்படி கூற? எவ்வளவு தைரியம் இருந்தால் அவன் ருத்ரனை விட்டுவிடும்படி சக்தியிடம் கூறுவான்! அவனது ரத்தம் கொதித்தது. தக்ஷிணாமூர்த்தியின் தலையை, சுவற்றில் மோதி உடைத்து விட வேண்டும் என்று தோன்றியது ருத்ரனுக்கு.

ருத்ரனின் முக பாவத்தை தான் கவனித்துக் கொண்டிருந்தாள் சக்தி. அவனது மனதில் தோன்றும் எண்ணங்களை அவளால் புரிந்து கொள்ள முடியாமல் ஒன்றுமில்லை. தக்ஷிணாமூர்த்தியையோ, அவரது வார்த்தைகளையோ அவள் பெரிதாக எடுத்துக் கொள்ளாவிட்டாலும், ருத்ரனை எண்ணி அவளுக்கு பயம் ஏற்பட்டது. அவளுக்கு தெரியாதா ருத்ரனை பற்றி? அவன் தன் பொறுமையை இழந்தால், தட்சிணாமூர்த்தியை கொன்று குவித்து விடுவானே...!

"சக்தி கண்ணா, அவனை இங்கிருந்து போக சொல்லு. நீ என்னோட ராஜகுமாரி. உன்னை ராணி மாதிரி வச்சு வாழக்கூடிய ஒருத்தனை நான் தேடி கண்டுபிடிக்கிறேன். இவன் எதுக்குமே சரிப்பட்டு வர மாட்டான். இவன் ஒரு பைத்தியம்"

தக்ஷிணாமூர்த்தியை நோக்கி முன்னேறிய ருத்ரனை தடுக்க சக்தி முயன்றாள். ஆனால் அது நடக்கின்ற காரியமா? சீறிவரும் புயலை யாரால் தடுத்துவிட முடியும்? தக்ஷிணாமூர்த்தியை ஓங்கி ஒரு உதை விட்டான் ருத்ரன். அவர் சுருண்டு விழுந்தார்.

"எவ்வளவு தைரியம் இருந்தா, என் பொண்டாட்டி கிட்ட இப்படி எல்லாம் பேசுவ? நீ யாருடா எனக்கும் என் பொண்டாட்டிக்கும் நடுவுல? நீ அவளைப் பெத்தவனா இருந்தா என்ன இப்போ? எந்த கொம்பனாலயும் என் பொண்டாட்டியை என்கிட்ட இருந்து பிரிக்க முடியாது. அப்படி ஏதாவது செஞ்சா, உன்னை நான் கொன்னு போடவும் தயங்க மாட்டேன்" சிங்கமென கர்ஜித்தான் ருத்ரன்.

"பாரு, இதை தான் சொன்னேன். இவனுக்கு பொறுமையும் இல்ல... மரியாதையும் இல்ல... கோவம் மட்டும் தான்... சரியான ஆத்திரக்காரன்..."

காதல் தின்ற மீதி...! ( முடிந்தது )Where stories live. Discover now