33 மனக்கிளர்ச்சி

1K 63 9
                                    

33 மனக்கிளர்ச்சி

தூக்கத்திலிருந்து கண்விழித்த சக்தி, தன் கைகளை நீட்டி சோம்பல் முறித்தாள். போர்வைக்கு வெளியே நீட்டப்பட்ட கைகளில் திடீர் குளிர் தாக்கியதால், மீண்டும் சட்டென்று உள்ளே இழுத்துக் கொண்டாள். அப்பொழுது தான், அவள் போர்த்தியிருந்த போர்வையின் நிறம் வெள்ளை நிறத்தில் இருந்ததை அவள் கவனித்தாள். பண்ணை வீட்டில் அவள் பயன்படுத்திய போர்வையின் நிறம், வெளிர் மஞ்சள் என்பது அவள் நினைவுக்கு வந்தது. அவள் ருத்ரனின் பக்கம் திரும்ப, அப்பொழுது தான், தான் தங்கியிருந்த அறை வேறு மாதிரியாய் இருந்ததை அவள் கவனித்தாள். அவளுக்கு ஒன்றும் புரியவில்லை. அந்த அறையில் தன் கண்களை ஓடவிட்ட போது, தான் இருப்பது பண்ணை வீட்டின் அறையில் அல்ல என்று அவளுக்கு புரிந்தது. அந்த அறையில், ஆள் உயர பெரிய ஜன்னல் ஒன்று இருந்தது. அந்த ஜன்னலின் வழியாக அவள் கண் முன் விரிந்த காட்சி அவளுக்கு பேரானந்தத்தை அளித்தது. மலைகளால் சூழப்பட்ட, பச்சை பசேல் என்று கண்களுக்கு விருந்தளித்த காட்சி அது. கட்டிலை விட்டு கீழே இறங்கி, அந்த ஜன்னலை நோக்கி ஓடியவள், தன் பாதத்தில் சுருக் என்ற குளிர்ச்சி பாய்வதை உணர்ந்து, மீண்டும் கட்டிலுக்கு ஓடிச்சென்று, அங்கிருந்து ருத்ரனின் செருப்பை அணிந்து கொண்டு மீண்டும் அந்த ஜன்னலின் அருகே வந்தாள். அவள் தங்கியிருந்த வீட்டின் எல்லைக்கு உட்பட்ட பகுதியில், மிகப் பெரிய, வண்ண மயமான ரோஜா தோட்டம் இருந்தது. பல வண்ண ரோஜா மலர்கள் அங்கு பூத்துக் குலுங்கிக் கொண்டிருந்தன. தான் இருப்பது சென்னையில் அல்ல என்று தீர்க்கமான முடிவுக்கு வந்தாள் சக்தி. அப்படி என்றால் இது எந்த இடம்? அவள் இங்கு வந்தது எப்படி? முதல் நாள் மாலை, துர்காவும் பரமேஸ்வரனும் பண்ணை வீட்டிற்கு வந்திருந்தார்களே... அவர்கள் என்ன ஆனார்கள்? அவர்களும் இங்கு வந்திருக்கிறார்களோ? அல்லது அவர்கள் வீட்டிற்கு திரும்பி சென்று விட்டார்களா? ஆனால் அவர்கள், அவளும் ருத்திரனும் அவர்களுடன் சேர்ந்து அவர்கள் வீட்டிற்கு வர வேண்டும் என்றல்லவா விரும்பினார்கள்...! அதை எண்ணி ருத்ரன் கூட கோபம் கொண்டானே...! தான் வீட்டிற்கு செல்ல விரும்பவில்லை என்று ருத்ரன் கூறினான்... அதன் பிறகு அவர்கள் இருவரும்  தங்கள் தாம்பத்தியத்தை துவங்கினார்கள்...! அதை எண்ணிய போது அவளது கன்னத்தில் சிவப்பேறியது. அவள் கனவு ஒன்றும் காணவில்லையே...! தன்னைத்தானே கிள்ளி பார்த்துக்கொண்டாள் சக்தி. அவளுக்கு வலித்தது. அப்படி என்றால் அவள் காண்பது கனவல்ல. அவள் உண்மையிலேயே வேறு எங்கோ இருக்கிறாள்.

காதல் தின்ற மீதி...! ( முடிந்தது )Where stories live. Discover now