37 யூகதிற்க்கு அப்பாற்பட்டவன்

946 57 7
                                    

37 யூகத்திற்கு அப்பாற்பட்டவன்

துர்காவுக்கு பதட்டம் அதிகரித்துக் கொண்டே சென்றது. சக்தி தனக்கு ஃபோன் செய்து, ருத்ரன் அவளை எங்கு கொண்டு சென்றான் என்று கூறுவாள் என எதிர்பார்த்திருந்தாள். அவளிடமிருந்து எந்த அழைப்பும் வராமல் போகவே, அவளுக்கு பயம் ஏற்பட்டது. சக்தியின் நிலைமை என்ன? அவளை ருத்ரன் எங்கே அழைத்துச் சென்றான்? சக்தி தங்களுக்கு ஃபோன் செய்யும் விஷயம் ருத்ரனுக்கு தெரிந்து விட்டதோ? அவர்களுக்கிடையில் என்ன நடந்ததோ தெரியவில்லையே... ருத்ரன், சக்தியின் மீது கோபப்படாமல் இருக்க வேண்டுமே...! அவனது கோபம், அவனை சுற்றி இருக்கும் பொருட்களை மட்டும் உடைப்பதில்லை... அவனை சேர்ந்தவர்களின் மனதையும் உடைத்துவிடும். அவன் அடுத்து என்ன செய்யப் போகிறான் என்பதை யாராலும் கணிக்க முடியாது. அவனது புத்தி எந்த திசையில் பயணிக்கும் என்பது மற்றவரின் யூகத்திற்கு அப்பாற்பட்டது.

"என்னாச்சு துர்கா?" என்றான் பரமேஸ்வரன்.

"நான் சக்தியை பத்தி யோசிச்சுக்கிட்டு இருக்கேன். புது இடத்துக்கு போனதுக்கு பிறகு, அவங்க எனக்கு கால் பண்ணுவாங்கன்னு நினைச்சேன்..."

"சரியான சந்தர்ப்பம் கிடைக்கும் போது அவங்க உனக்கு நிச்சயம் கால் பண்ணுவாங்க. அவங்க நிலைமை என்னன்னு நமக்கு தெரியாது இல்லையா...? ஒருவேளை அவங்க இருக்கிறது எந்த இடம்னு அவங்களுக்கே தெரியலையோ என்னவோ...!"

"அது தான் எனக்கு ரொம்ப கவலையா இருக்கு. அவங்க எங்க இருக்காங்கன்னு தெரியல. தான் ஒரு புது இடத்தில இருக்கிறதை பார்த்து, சக்தி என்ன செய்யப் போறாங்களோ தெரியல" என்றாள் கவலையாக.

"நீ சொல்றதும் சரி தான். மச்சானுக்கு தான் யாரும் தன்னை கேள்வி கேட்டா பிடிக்காதே..." என்றான்.

"அதுக்காக, சக்தி அவனை கேள்வி கேட்காம இருக்கணும்னு நம்ம எதிர்பார்க்க முடியாது இல்லையா?"

"அவங்க கொஞ்சம் கூட கற்பனை பண்ண முடியாத விஷயமெல்லாம் நடந்தா, அவங்களால கேள்வி கேட்காம எப்படி இருக்க முடியும்?" பெருமூச்சு விட்டான் பரமேஸ்வரன்.

காதல் தின்ற மீதி...! ( முடிந்தது )Where stories live. Discover now