25 அவநம்பிக்கை

1K 60 5
                                    

25 அவநம்பிக்கை

சக்தி சமைத்துக் கொடுத்த அண்ணாச்சிபழ கேசரியை ரசித்து ருசித்துக் கொண்டிருந்தான் ருத்ரன். சக்தியின் கையில் மாயாஜாலம் இருக்கிறது என்று எண்ணும் அளவிற்கு அது சுவையாய் இருந்தது. ருத்ரனுக்கு அன்னாசிப்பழ கேசரி மிகவும் பிடிக்கும் தான். ஆனால் அவன் என்றும் அதில் மனதை பறிகொடுத்ததில்லை. இன்று அவனால் அப்படி செய்யாமல் தப்பிக்க முடியவில்லை. சக்தி தான் இனிப்பு செய்வதில் கைதேர்ந்தவள் ஆயிற்றே...! அதை எண்ணி புன்னகைத்த அவன், அவள் மனதில் என்ன இருக்கிறது என்று புரிந்து கொள்ள முடியாமல் தவித்தான். இந்த முறை அவள் தப்பிச்செல்ல முயன்றால், அவளுக்கு நிச்சயம் நல்ல பாடம் புகட்டப்படும், என அவன் எண்ணிய போது, அவன் தேக்கரண்டியை பிடித்திருந்த பிடி இறுகியது. தன் வாழ்க்கைக்கு அவள் எவ்வளவு முக்கியம் என்பதை அவளுக்கு உணர்த்த வேண்டும் என்று நினைத்தான் அவன். தான் வாழ அவள் வேண்டும், அது அவளுக்கு தெரிய வேண்டும் என்பது அவசியம் என்பதை உணர்ந்தான் அவன். ஆனால் ஏன் அவள் அவனைப் புரிந்து கொள்ள மறுக்கிறாள்? நடராஜ் எவ்வளவு பெரிய ஏமாற்று பேர்வழி என்பதை அவள் புரிந்து கொண்ட பின்னும் ஏன் அவள் மனம் மாறவில்லை?

அப்பொழுது இன்னொரு கின்னத்தில் அன்னாசிப்பழ கேசரியுடன் அங்கு வந்த சக்தி, கட்டிலில் அமர்ந்து கொண்டு அதை சாப்பிட துவங்கினாள். அவள் அருகில் சென்று அமர்ந்து கொண்ட ருத்ரன்,

"நீ ரொம்ப நல்லா செஞ்சிருக்க. ரொம்ப டேஸ்டியா இருக்கு" என்றான்.

"இது என்ன பெரிய விஷயம்? நான் ஸ்வீட் செய்ற குடும்பத்திலிருந்து தானே வந்திருக்கேன்?" ஆனாயசமாய் தோள்களை குலுக்கினாள் சக்தி.

"ஆனா, சமையல்ல மனசு லயிச்சி செய்யறது ரொம்ப அவசியம். சின்ன தப்பு கூட எல்லாத்தையும் கெடுத்துடும்... இல்லயா?"

"உங்களுக்கு சமைக்க தெரியுமா?" என்றாள் சக்தி ஆர்வமாக.

இல்லை என்று தலையசைத்தான் ருத்ரன்.

காதல் தின்ற மீதி...! ( முடிந்தது )Where stories live. Discover now