36 சிவாவின் யூகம்
சிவாவின் போலீஸ் நண்பனிடமிருந்து அவனுக்கு அழைப்பு வந்தது. அந்த அழைப்பை ஏற்றான் சிவா.
"சொல்லுங்க சார்"
"சிவா, அந்த கார், ஏஹெச் 44 ல, ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம், வேலூர், ஆம்பூர், கிருஷ்ணகிரி தாண்டி... அதாவது, சென்னை டூ பெங்களூரு ரூட்ல போயிருக்கு. ஆனா, ஓசூரை தாண்டி போகல..."
"ஓ அப்படியா சார்? ரொம்ப நன்றி சார்"
"ஏதாவது பிரச்சனையா?"
"ஒன்னும் இல்ல சார். ஒரு கேஸ் விஷயமா தான்..."
"ருத்ரன் எப்படி இருக்காரு?"
"வழக்கம் போல பிஸியா இருக்காரு"
"அப்படித் தானே இருக்கணும்? அவர் ருத்ரனாச்சே" என்று சிரித்தார் அந்த காவல் அதிகாரி.
"நீங்க சொல்றது சரி தான் சார்"
"ஏதாவது ஹெல்ப் வேணும்னா என்கிட்ட கேளுங்க, சிவா"
"நிச்சயமா சார். தேங்க்யூ சோ மச்"
அழைப்பை துண்டித்தார் அந்த காவல்துறை அதிகாரி.
*ருத்ரன் ஓசூரில் இருக்கிறான். ஆனால் அவனுக்கு அங்கு எந்த சொத்தும் இல்லையே...! அவன் அதற்காகவே கூட அந்த ஊரை தேர்ந்தெடுத்திருக்கலாம், அவர்களுடைய கவனத்தை திசை திருப்புவதற்காக. ருத்ரனுக்கு எங்கெல்லாம் சொத்துக்கள் இருக்கிறது என்பது சிவாவுக்கு நன்றாக தெரியும் என்பதற்காகவே, அவனுக்கு எந்த சொத்தும் இல்லாத ஓசூருக்கு அவன் சென்றிருக்க வேண்டும். அல்லது அவர்களுக்கு தெரியாமல் அவன் அங்கு ஏதாவது ஒரு சொத்தை வாங்கியிருக்க வேண்டும். ஆனால் இப்பொழுது எப்படி ருத்ரனை கண்டுபிடிப்பது? ஓசூர், *மாநகராட்சி* அந்தஸ்து பெற்றுவிட்ட, வளர்ந்து வரும் ஒரு நகரம். பெங்களூருவில் பணிபுரியும் பலரும், பெங்களூருவில் *லிவிங் காஸ்ட்* அதிகம் என்பதால், அதற்கு அருகில் இருக்கும் ஓசூரை தான் குடியேறுவதற்காக தேர்ந்தெடுக்கிறார்கள். எந்த விவரமும் இன்றி ஒருவரை கண்டுபிடிப்பது என்பது அவ்வளவு சுலபம் அல்ல* என்பதையெல்லாம் அலசி ஆராய்ந்தான் சிவா.
YOU ARE READING
காதல் தின்ற மீதி...! ( முடிந்தது )
Romanceஉச்சி வெயில் மண்டையை பிளந்து கொண்டிருந்தது. லட்சணமான முகக் கலையுடன் இருந்த ஒருவன், குளிரூட்டப்பட்ட தன் காரில் அமர்ந்திருந்தான், அந்த வெயில் தன்னை ஒன்றும் செய்ய முடியாது என்பது போல. அவனது பார்வை ஒரு குறிப்பிட்ட திசையில் இருந்தது. கோபத்தில் சிவந்திருந...