10 பணமா, சிறையா?

926 62 7
                                    

10 பணமா, சிறையா?

அந்த சம்பவத்திற்கு பிறகு, வீட்டை விட்டும் வெளியே வரும் தைரியம் இருக்கவில்லை நடராஜுக்கு. எல்லா திருமண வேலைகளையும் பார்க்கும்படி தன் தந்தையையே அவன் அனுப்பி வைத்தான். தவிர்க்க முடியாத வேலைகளுக்கு, தன் நண்பர்கள் புடை சூழ சென்றான்.

மகாதேவனும், அவனது நண்பர்களும் ருத்ரனின் கைப்பேசி அழைப்பை ஏற்கவே நடுங்கினார்கள். அவர்களிடமிருந்து எந்த செய்தியும் வராமல் போனதால், கோபத்தில் கொதித்துக் கொண்டிருந்தான் ருத்ரன். இறுதியில், நேரில் சென்று மகாதேவனை பார்ப்பது என்று முடிவுக்கு வந்து, அவன் வீட்டிற்கு வந்தான்.

தன் கண்களில் நெருப்பை வாரி இறைத்து கொண்டிருந்த ருத்ரனை தன் வீட்டில் பார்த்ததும், மென்று முழுங்கினான் மகாதேவன்

"சார்... நாங்க வந்து..."

"நான் கொடுத்த வேலையை உங்களால செய்ய முடியலன்னா என்கிட்ட சொல்ல வேண்டியது தானே?" என்றான் காட்டமாக.

"இல்ல சார், எடுத்த வேலையை முடிக்காம நாங்க விட மாட்டோம"

"நீங்க வேலையை முடிக்கிறதுக்குள்ள, அவன் சக்தியை கல்யாணம் பண்ணிக்கிட்டு போயிடுவான்" சீறினான் ருத்ரன்.

"நடராஜன் வீட்டை விட்டு தனியா எங்கயுமே வரல, சார். எங்க போனாலும் அவனோட ஃபிரண்டுங்க கூடயே சேர்ந்து போறான்"

"அப்படின்னா, அவன் காலை எப்படி உடைப்பீங்க?"

"எப்படியாவது அவனை வெளியே வர வச்சு செஞ்சிடுவோம் சார்"

"உங்களுக்கு ரெண்டு நாள் டைம் தரேன். அதுக்கு பிறகு நான் வெயிட் பண்ண மாட்டேன்"

"சரிங்க சார்"

மகாதேவனிடம் கொடுக்கப்பட்ட வேலையை அவன் முடிக்காமல் போனால், அடுத்து என்ன செய்வது என்பதை பற்றி சிந்தித்தபடி அந்த இடம் விட்டு அகன்றான் ருத்ரன்.

இரண்டு நாட்களுக்கு பிறகு...

துரதிஷ்டவசமாய், மகாதேவனால் ருத்ரன் கொடுத்த வேலையை முடிக்க முடியவில்லை. தன் பொறுமையை முழுமையாய் இழந்து விட்டிருந்தான் ருத்ரன். ஏனென்றால், சக்தியின் திருமணத்திற்கு இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே இருந்தது. இனி மகாதேவனை நம்பி எந்த பிரயோஜனமும் இல்லை என்ற முடிவுக்கு வந்த அவன், தானாகவே களத்தில் இறங்கினான்.

காதல் தின்ற மீதி...! ( முடிந்தது )Where stories live. Discover now