34 உத்திரவாதம்

1K 62 7
                                    

34 உத்திரவாதம்

இதற்கிடையில்,

பரமேஸ்வரனும், துர்காவும் வீடு வந்து சேர்ந்தார்கள். ருத்ரனையும், சக்தியையும் காண ஆவலோடு காத்திருந்த அவர்களது குடும்பத்தார் அவர்களை சூழ்ந்து கொண்டார்கள்.

"எங்க நம்ம ருத்ராவும் சக்தியும்?" என்றார் பாட்டி.

"அவங்க வரல பாட்டி" என்றாள் துர்கா.

"ஏன்? எதுக்காக நீ அவங்களை கூட்டிகிட்டு வரல?"

"நான் அவங்களை எங்க கூட வர சொல்லி கேட்டேன். அவனும் ஒத்துக்கிட்டான். ஆனா..." என்று இழுத்தாள் துர்கா.

"அவர் ஒத்துக்கல... ஒத்துக்கிட்ட மாதிரி நடிச்சாரு..." என்றான் பரமேஸ்வரன்.

"அவன் சொன்னதை நீ கேட்டிருக்கக் கூடாது. சரி, வா போகலாம். நானும் வரேன். நான் வந்து அவன் கிட்ட பேசுறேன்" என்றார் பாட்டி.

"இல்ல பாட்டி... அவன் இப்போ அங்க இல்ல" என்றாள் துர்கா.

"அவன் அங்க இல்லன்னா என்ன அர்த்தம்?"

"அவன் சக்தியோட  ஃபார்ம் ஹவுஸை விட்டு போயிட்டான்"

"எங்க போனான்?"

"எங்களுக்கு தெரியல..."

"அவனைத் தடுத்து நிறுத்த சக்தி எந்த முயற்சியும் செய்யலையா?"

"அதை செய்யறதுக்கு முன்னாடி, அவர் அவங்க கிட்ட பர்மிஷன் கேட்டிருப்பாருனு நினைக்கிறீங்களா? அவர் அவங்களை சென்னைக்கு தூக்கிகிட்டு வந்தப்போ, அவங்க கிட்ட பர்மிஷன் கேட்டுட்டா தூக்கிக்கிட்டு வந்தாரு? அவர் எதையாவது செய்யணும்னு நினைச்சா, அவருக்கு யாரோட பர்மிஷனும் தேவையில்ல, பாட்டி" என்றான் பரமேஸ்வரன்.

தலையில் கை வைத்துக் கொண்டு சோபாவில் அமர்ந்தார் பாட்டி. மற்றவர்கள் ஒருவரை ஒருவர் இயலாமையுடன் பார்த்துக் கொண்டார்கள்.

"இப்ப நம்ம என்ன செய்யறது?" என்றார் பாட்டி.

"எதுவும் செய்யாம அமைதியா இருக்க சொல்லி சிவா சொல்றாரு. அவரு ஏதாவது செய்யட்டும். அது வரைக்கும் நம்ம எதுவும் செய்யாம இருக்கிறது தான் நல்லது" என்றான் பரமேஸ்வரன்.

காதல் தின்ற மீதி...! ( முடிந்தது )Where stories live. Discover now