11 ருத்ரனின் முடிவு
திருமண மண்டபத்தில் கூடியிருந்தவர்கள் அதிர்ச்சிக்கு உள்ளானார்கள்... முக்கியமாய், கல்யாணப் பெண் சக்தி. அவன் என்ன கேட்டான்? அவன் அவளைத் திருமணம் செய்து கொள்ள வேண்டுமா?
அதிர்ச்சி நிறைந்த முக பாவத்துடன் அவனைப் பார்த்துக் கொண்டு நின்றாள் சக்தி. அவன் மனதில் தன்னைப் பற்றி என்ன நினைத்துக் கொண்டிருக்கிறான்? நட்ராஜ் இந்த பிரச்சினையை சமாளிக்கும் திராணி இல்லாதவன் என்று நினைக்கிறானா? அல்லது நடராஜ் ஒரு கோழை என்பதால் இதை செய்ய நினைக்கிறானா? அவனுடைய மனநிலையை புரிந்து கொள்ள முடியவில்லை சக்தியால்.
"என்ன சொன்ன நீ?" என்றான் நட்ராஜ்.
"உனக்கு 20 லட்சம் கொடுத்துட்டு சக்தியை நான் கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொன்னேன்" என்றான் ருத்ரன்.
பதட்டத்துடன் நடராஜை ஏறிட்டாள் சக்தி. அவன் என்ன சொல்லப் போகிறானோ...!
"முடியாது... எனக்கு உன் பணம் தேவையில்ல" என்று கூறி அவளை நிம்மதி பெருமூச்சு விடச் செய்தான் நட்ராஜ். ஆனால் அது ருத்ரனின் கோபத்தை அதிகரித்தது.
"ஆமாம், எங்களுக்கு ஒன்னும் உன்னோட பணம் தேவையில்ல" என்றார் விசாலாட்சி.
அம்மாவும் பிள்ளையும் ருத்ரனின் உதவியை ஏற்க தயாராக இல்லை. ஏனென்றால், சக்தியிடம் அதைவிட அதிகமான பணமும், 70 லட்சம் மதிப்புள்ள வீடும் இருந்தது. சக்தியின் அப்பாவுடைய இன்சூரன்ஸ் பணத்தை வைத்து, அவன் பக்தவச்சலத்திற்கு 20 லட்சம் கொடுத்தது போக, மீதி பணத்தை கொண்டு, சுய தொழில் கூட தொடங்கி விட முடியுமே...
"அப்படின்னா, உன்னை அரெஸ்ட் பண்றதை தவிர எங்களுக்கு வேற வழியில்ல" என்றார் இன்ஸ்பெக்டர்.
"நான் ஜெயிலுக்குப் போக தயாரா இருக்கேன். ஆனா சக்தியை வேற யாருக்கும் விட்டுக் கொடுக்க மாட்டேன்" என்றான் நட்ராஜ்.
நடராஜனை நினைத்து பெருமைப்பட்டாள் சக்தி. அவன் தன்னை மணந்து கொள்ள வேண்டும் என்பதில் இவ்வளவு நிலையாய் நிற்பான் என்று அவள் எதிர்பார்த்து இருக்கவில்லை. இந்த ஒரு தகுதி போதாதா அவனை திருமணம் செய்து கொள்ள..?
YOU ARE READING
காதல் தின்ற மீதி...! ( முடிந்தது )
Romanceஉச்சி வெயில் மண்டையை பிளந்து கொண்டிருந்தது. லட்சணமான முகக் கலையுடன் இருந்த ஒருவன், குளிரூட்டப்பட்ட தன் காரில் அமர்ந்திருந்தான், அந்த வெயில் தன்னை ஒன்றும் செய்ய முடியாது என்பது போல. அவனது பார்வை ஒரு குறிப்பிட்ட திசையில் இருந்தது. கோபத்தில் சிவந்திருந...