31 சக்தி தான் குறி

974 62 10
                                    

31 சக்தி தான் குறி

இதற்கிடையில்...

பரமேஸ்வரனை பார்த்து புன்னகைத்தபடி கட்டிலில் அமர்ந்தாள் துர்கா.

"கடைசியில நீ நினைச்சதை சாதிச்சிட்ட. ஒரு வழியா, உன் தம்பி உன்னோட வர ஒத்துக்கிட்டாரு" என்றான் பரமேஸ்வரன்.

"அவன் இஷ்டத்துக்கு எல்லாம் நம்ம அவனை விட்டு விட முடியாது. அவனும் சக்தியும் நம்ம வீட்ல தான் இருக்கணும். அவங்களுக்குன்னு குடும்பம் இருக்கு. அப்படி இருக்கும் போது, எதுக்காக அவங்க இங்க வந்து யாரும் இல்லாத அனாதைங்க மாதிரி இருக்கணும்?"

"சீக்கிரமே ருத்ரன் முழுமையா குணமடைச்சிடுவார்னு நினைக்கிறேன்"

"ஆமாம், அவன் நம்ம வீட்டுக்கு வந்த பிறகு, அவனை ட்ரீட்மென்ட்டுக்கு ஒத்துக்க வைக்கணும்"

"ஆமாம். அவருக்கு ட்ரீட்மென்ட் அவசியம். இப்போ நம்ம அதை சக்தி மூலமா செய்யலாம்"

"நமக்காக சக்தி அதை நிச்சயமா செய்வாங்க" என்றாள் துர்கா சந்தோஷமாக.

"நல்ல காலம், நம்ம இது சம்பந்தமா ஏற்கனவே டாக்டர் கிட்ட பேசி வச்சிருந்தோம். இன்னும் ரெண்டு மூணு மாசம் ருத்ரனை ஹாஸ்பிடல் அட்மிட் பண்ணா, அவரு கம்ப்ளீட்டா குணமாயிடுவாரு"

"ஆமாம்"

"இதைப் பத்தி அவருக்கு தெரியாம பார்த்துக்கனும். அவருக்கு தெரிஞ்சா, நிச்சயம் ட்ரீட்மென்ட்க்கு ஒத்துக்கவே மாட்டாரு. அவருக்கே தெரியாம நம்ம இதை செய்யணும்"

"நீங்க சொல்றதும் சரி தான்"

"கொஞ்ச நேரம் தூங்கலாம். நாளைக்கு காலையில நம்ம கிளம்பனும் இல்லையா?" என்று கட்டிலில் படித்துக் கொண்டான் பரமேஸ்வரன்.

கட்டிலின் மறுபுறம், துர்காவும் படுத்து கண்ணயர்ந்தாள்.

அதே நேரம், அந்த பண்ணை வீட்டின் வெளியே...

அந்தப் பண்ணை வீட்டை கண்காணித்துக் கொண்டிருந்த ஒருவன், தன் பேண்ட் பாக்கெட்டில் இருந்து கைபேசியை வெளியே எடுத்து யாருக்கோ அழைப்பு விடுத்தான். அழைப்பு, மறுபுறம் ஏற்கப்பட்டது.

காதல் தின்ற மீதி...! ( முடிந்தது )Where stories live. Discover now