பாகம் 48

135 23 10
                                    

🔱பூமியின் பூங்குழலி🔱

🔱பாகம் 4️⃣8️⃣

சாந்தி - விடுடா அவளை.....

ரங்கநாதன் - ஏய் என்னையே அடிக்கிற அளவுக்கு வந்துட்டியா

சாந்தி - விடுன்னு சொல்றேன் இல்ல...

மனோகர் - நீ இரு ரங்கா இவளை நான் என்ன பன்றேன் பாரு...

ரங்கநாதன் - நீங்க இருங்க ஐயா... இவளை நான் இன்னைக்கு எமலோகம் அனுப்புறேன்..

என்று கத்திய ரங்கநாதன் சாந்தியின் கைகளை பிடித்து அவரை தாக்க போன சமயம்.... சாந்தி கோவம் கொண்டு மீண்டும் ரங்கநாதனை அருவமனையை கொண்டு தாக்க.... ரங்கநாதனின் உயிர் அதே இடத்தில் பிரிய....இந்த காட்சியணை பார்த்த மனோகர் குடி போதையில் சாந்தியை தன் இடுப்பில் வைத்து இருந்த கத்தியை கொண்டு தாக்க...இருவருக்கும் இடையிலான சண்டையில் மனோகர் சாந்தியை கோவமாக குத்தி கொலை செய்தவன்...அவளை வேகமாக எட்டி உதைக்க...சாந்தி சுவற்றில் மோதி அதே இடத்தில் கீழே சரிந்து விழ.....இந்த கட்சியினை பார்த்து மயங்கி விழுந்த சித்ரபூங்குழலியின் நிலையை பொருட்படுத்தாத மனோகர் அந்த இடத்தில் இருந்து மின்னல் வேகத்தில் மறைந்து விட..சில நிமிடங்கள் கடந்த நிலையில் SJ வும் சூர்யாவும் வீட்டிற்குள் நுழைந்தவர்கள்... ரத்த வெள்ளத்தில் கிடந்த ரங்கநாதனையும் சாந்தியையும் பார்த்து என்ன நடந்தது என்று அறியாமல் அதிரிச்சியில் உறைந்து இருந்தவர்கள் கண்களில் பூங்குழலி மயங்கிய நிலையில் இருப்பவள் தென்பட....SJ அந்த சடலத்தின் அருகில் செல்ல....

சூர்யா - என்ன இது.......என்ன ஆச்சு.... ஐயோ அம்மா அம்மா இங்க பாருமா

SJ - சூர்யா உன் அம்மா இறந்துட்டாங்க... உங்க அப்பாவும் இறந்துட்டாரு...

சூர்யா - ஐயோ இங்க என்ன நடந்தது..

SJ - அங்க பாரு சித்ரா மயங்கி இருக்கிறா... இரு நான் போய் தண்ணி எடுத்துட்டு வரேன்

சூர்யா - ஐயோ அம்மா....

என்று சூர்யா ஒரு பக்கம் கத்த..... SJ சித்ராவின் முகத்தில் தண்ணீர் தெளித்தும் எந்த ஒரு துடிப்பும் இல்லாமல் சித்ர பூங்குழலி மயங்கி இருக்க....SJ கை பேசி வாயிலாக காவல் துறையினரிடம் இங்கு நடந்த அசம்பாவிதத்தை பற்றி தெரியப்படுத்திய அடுத்த சில நிமிடங்களில் மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸும் காவல்துறையினரும் சூர்யாவின் இல்லத்திற்கு வர....அதே சமயம் தேவியும் தேவராஜூம் கோவிலில் இருந்து வந்தவர்கள் என்ன நடந்தது என்று புரியாமல் தவித்து இருக்க

🔱பூமியின் பூங்குழலி🔱 Waar verhalen tot leven komen. Ontdek het nu