பாகம் 3

298 37 37
                                    

பூமி - என்ன கேள்வி கேட்கணும் கேளு

Ups! Tento obrázek porušuje naše pokyny k obsahu. Před publikováním ho, prosím, buď odstraň, nebo nahraď jiným.

பூமி - என்ன கேள்வி கேட்கணும் கேளு

பூங்குழலி - நீங்க யாரையாவது லவ் பண்ணி இருக்கீங்களா

பூமி - கல்யாணம் பண்ணதுக்கு அப்புறம் பொண்டாட்டிய தான் காதலிக்கணும்ன்னு நான் எனக்குள்ளே ஒரு தீர்க்கமான முடிவோட தான் இருக்கேன்

பூங்குழலி - அப்போ இதுதான் என் ரெண்டாவது கேள்வி கல்யாணத்துக்கு அப்புறம் நீங்க மறுபடியும் வெளிநாட்டுக்கு போவீங்களா

பூமி - இல்ல கடைசி காலத்துல அப்பா கூட சந்தோஷமா இருக்கணும்னு ஆசைப்பட்டு தான் அங்க இருந்த என் அக்ரீமெண்ட் எல்லாம் கேன்சல் பண்ணிட்டு இங்கே வந்து இருக்கேன்

பூங்குழலி - என்னுடைய மூணாவது கேள்வி ஒருவேளை உங்களுக்கு என்னை கல்யாணம் பண்ண விருப்பம் இருந்தா கல்யாணத்துக்கு அப்புறம் நான் எங்க அப்பா கிட்ட பாசமா இருக்கிறத பார்த்து நீங்க என்கிட்ட சண்டை போடுவீங்களா

பூமி - 🙄

பூங்குழலி - ஏன்னா என் அப்பாவுக்கு நான் மட்டும்தான்...என் அம்மா மறைவுக்குப் பிறகு அவர் எனக்கு அம்மாவாக இருந்ததை காட்டிலும் நான் அவருக்கு தாயாக இருக்கணும்னு ஆசைப்பட்டேன்..அதனால கல்யாணம் கூட பண்ணிக்க வேணான்னு தான் நினைச்சேன்..ஆனா நான் அப்படி பண்ணா என் அப்பாவுக்கு அது மன நிம்மதியே கொடுக்காது..அவர் முதல் முதலில் சந்திரன் மாமாவுடைய மகனை நீ கட்டிக்கிட்டா எங்களுடைய நட்பும் வழுமையடையும்.. நானும் உன்னை ஒரு நல்ல குடும்பத்தில் கல்யாணம் பண்ணி கொடுத்தேன் என்ற சந்தோஷத்துல நிம்மதியா என் கடைசி காலத்தை கழிச்சிடுவேன்னு சொன்னதால தான் நான் மறுப்பு எதுவும் பேசாமல் இப்போ உங்க முன்னாடி நிக்கிறேன்....உங்களுக்கு என்னை பிடிச்சிருந்தா நீங்க உங்க பதிலை சொல்லலாம்...

🔱பூமியின் பூங்குழலி🔱 Kde žijí příběhy. Začni objevovat