பாகம் 45

114 23 13
                                    

🔱பூமியின் பூங்குழலி🔱

🔱பாகம் 4️⃣5️⃣

பூங்குழலியிடம் கோபப்பட்ட பூமிநாதன் கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கிருந்து சென்று விட....

இத்தனை நாட்களாக மறைத்து வைத்திருந்த விஷயம் எப்படி பூமிநாதனுக்கு தெரிந்தது என்ற குழப்பத்தில் அனைவரும் விழித்திருக்கும் சமயம் ஆனந்த் வீட்டிற்கு நடுவில் இருந்த சோபாவில் கால் மேல் கால் போட்டபடி அமர்ந்தவன் சத்தமாகவும் கேவலமாகவும் சிரிப்பவனை பார்த்து அனைவரும் முறைக்க

சந்திரன் - டேய் உன்ன நான் இந்த வீட்டுக்குள்ள வர வேண்டாம் என்று தானே சொன்னேன்....வந்ததும் இல்லாம என்னடா திமிரா போஸ் வேற கொடுத்துக்கிட்டு இருக்க

ஆனந்த் - சித்தப்பா போதும் போதும் நிறுத்துங்க இதுக்குமேல் பட்டு உங்களுடைய வசனம் எல்லாம் இங்கே செல்லுபடி ஆகாது...அதான் நீங்க பெற்றெடுத்த பத்திர மாதத்து தங்கமே நீங்கெல்லாம் ஒரு அப்பாவா என்ற மாதிரி கேள்வியை கேட்டுட்டு போயிட்டானே இன்னும் உங்களுக்கு எதுக்கு இந்த வீர வசனம் எல்லாம

சந்திரன் - ஏய் அவன் என் மகன்.... அவன் என்னை ஆயிரம் கேள்வி கேட்பான் நான் அவனை ஆயிரம் கேள்வி கேட்பேன் இதுக்கு நடுவுல நீ யாருடா

ஆனந்த் - என்னது நான் யாரா.. என்னையா கேக்குறீங்க நான் யாருன்னு

சந்திரன் - ஏன் உனக்கு என்ன காது தீஞ்சு போச்சா உன்னதான்டா கேட்கிறேன் அப்பன் மகனுடைய விஷயத்துல தலவிட உனக்கு என்ன உரிமை இருக்கு

ஆனந்த் - இனிமே பூமி கிட்ட எனக்கு தான் எல்லா உரிமையும் இருக்கு சித்தப்பா.... புரியலையா இப்போ கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி பூமி உங்களை லெப்ட் அண்ட் ரைட் வாங்கியதற்கு யார் காரணம்.....நான் தான் காரணம்......எப்பா எப்பா எப்பா சும்மா சொல்லக்கூடாது....என்ன மாதிரி பெர்பார்மன்ஸ்.... ஹ்ம்...இவங்க எல்லாம் ஒரே குடும்பம் என்பதை மறைத்து என் தம்பிக்கு இந்த பொண்ண கல்யாணம் பண்ணி வச்சதும் இல்லாம.... இதுக்கெல்லாம் உடந்தையா நீங்க இருந்திருக்கறீங்க பாருங்க....அங்க நிக்குறிங்க நீங்க...... ஆமா.....அப்படி என்ன சித்தப்பா இந்த பொண்ண என் தம்பிக்கு கல்யாணம் பண்ணி வைக்கணும் என்றதுல உங்களுக்கு அவ்வளவு ஆர்வம்...அப்போ இந்த பொண்ணு உங்களுக்கு....

🔱பூமியின் பூங்குழலி🔱 Where stories live. Discover now