பாகம் 47

103 24 19
                                    

🔱பூமியின் பூங்குழலி🔱

🔱பாகம் 4️⃣7️⃣

ராஜன் - ஐயோ என் மக... அம்மாடி பூங்குழலி

சந்திரன் - டேய் பூமி ...பூங்குழலி வீட்டை விட்டு போறா டா....

என்று சந்திரன் சொல்ல.... பூமியோ பிரேம்மை பிடித்தது போல நின்று இருக்க...

தேவி - சூர்யா நீ போய் சித்ராவை அழைச்சிட்டு வா....

SJ - சூர்யா நீ இரு நான் போய் பாக்குறேன்....

என்று சொன்ன SJ அந்த வீட்டை விட்டு வேகமாக வெளியே செல்ல..... ராஜன் தலையில் அடித்து கொண்டு அழ...சந்திரன் ராஜனுக்கு ஆறுதல் சொல்ல....... தேவராஜ் கண்கள் கலங்க........பூமிக்கு இப்போது வரை தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்று தெரியாமல் இருந்த நிலையில்.. கோவம் கொண்ட சூர்ய பூங்குழலி...

சூர்ய பூங்குழலி - அழுங்க...நல்லா அழுங்க......நான் அப்பவே சொன்னேன்.... உண்மையை எல்லாம் அடைத்து வைக்கலாமே தவிர அழித்து விட முடியாதுன்னு கேட்டீங்களா....

தேவி - சூர்யா நீ கோவப்படாத மா

சூர்ய பூங்குழலி - போதும் நிறுத்துங்க... நீங்களும் பெரிய மனுஷி தானே.... இவரு தான் உண்மையை மறைத்து சித்ராவுக்கு கல்யாணம் பண்ணி வச்சு இருக்காருன்னா... நீங்களும் சேர்ந்து அவரோட தப்புக்கு துணை நின்னு இருக்கீங்க...

தேவி - என்னை என்ன மா பண்ண சொல்ற..

சூர்ய பூங்குழலி - இந்த ஒரு வசனத்தை மாத்தவே மாட்டிங்களா...

பூமி - இங்க என்ன நடக்குது.... பூங்குழலி என்ன சொல்றா.... அவ ஏன் ஜெயில்ல இருக்கனும்.... ஐயோ.. எனக்கு மண்ட வெடிக்குற மாதிரி இருக்கு.... madame pls நீங்களாவது சொல்லுங்களேன்... என்னை சுற்றி என்ன நடக்குதுனே தெரில....

சூர்ய பூங்குழலி - முதல்ல நீங்க உங்க wife kku என்ன நடந்தது nnu தெரிஞ்சிக்கோங்க..... அவ ஒரு குழந்தை போல.... இவுங்க எல்லோரும் அவளை எடுப்பார் கை பிள்ளையா use பண்ணி இருக்காங்க.... including உங்க அப்பா

சந்திரன் - என்னமா நீ இப்படி சொல்ற.

சூர்ய பூங்குழலி - yes...நீங்க பண்ணதும் தப்பு தான்.. என்னதான் உங்க மகனா இருந்தாலும் இவர்கிட்ட உண்மையை மறைத்து நீங்க எப்படி சித்ராவை இவருக்கு கல்யாணம் பண்ணி வச்சீங்க....

🔱பூமியின் பூங்குழலி🔱 Where stories live. Discover now