பாகம் 29

124 25 19
                                    

❤️பூமியின்🔱பூங்குழலி❤️

❤️பாகம் 2️⃣9️⃣

ஆனந்தராஜ் பூங்குழலியின் அருகில் வந்தவன் அவனின் மூச்சுக்காற்று அவள் முகத்தில் படும்படி நக்கலாக

இங்க பாரு.......நானு பூமிநாதனுடைய அண்ணன்.... உனக்கு மாமா முறை புரியுதா...... நீ என்னுடைய தம்பி பொண்டாட்டி......தம்பி பொண்டாட்டினா தனக்கும் பொண்டாட்டி த.......

என்று அவன் சொல்லி முடிக்கும் முன் தேவி பாட்டி ஆனந்தின் கன்னத்தில் பளார் என்று ஒரு அறை விட..ஆனந்த கண்கள் சிவந்து பாட்டியை முறைத்தவன்

ஆனந்த் - கிழவி உனக்கு எவ்வளவு தைரியம் இருந்தால் என் மேல கையை வைப்ப

தேவி மீண்டும் ஒரு அறை விட்டவர்

தேவி - என்னது கிழவியா...வயசுக்கும் மரியாதை இல்ல வார்த்தையிலும் ஒழுக்கம் இல்ல நடத்தயில் நேர்மையும் இல்ல.. என்ன மனுஷன் நீ...தம்பி பொண்டாட்டினா தான் பொண்டாட்டி மாதிரி ன்னு நாக்கு கூசாம சொல்ல வர... அசிங்கமா இல்ல உனக்கு...இங்க பாரு இப்ப கூட ஒன்னும் கெட்டுப் போகல..நான் ஒரே ஒரு வார்த்தை சொன்னால் சந்திரன் உன்னை கழுத்தை பிடித்து வெளியே தள்ளிடுவான்...ஏதோ நீ ஊர் விட்டு ஊர் வந்து எங்க பூமி மாப்பிள்ளைக்காக கட்டிடம் கட்ட உதவி செய்யப் போற என்கிற ஒரே காரணத்தால நான் சும்மா இருக்கிறேன்.. இல்லன்னு வை உனக்கு மரியாதை கெட்டுடும் சொல்லிட்டேன்

பூங்குழலி - பாட்டி கொஞ்சம் சும்மா இருங்க

தேவி - நீ சும்மா இரு.. என்ன நீ இவன் எல்லாம் ஒரு ஆள் என்று உன்கிட்ட வந்து பேசுறத கேட்டுக்கிட்டு இருக்க.. இழுத்து வச்சி கன்னத்தில ரெண்டு விட தெரியாது உனக்கு

பூங்குழலி - இல்ல பாட்டி இவரு பூமியுடைய அண்ணன்

தேவி - எவனா இருந்தா என்ன..நம்ம கிட்ட எவனாது அத்து மீறும் பொழுது அவன் பல்லு பகடையை பெத்திடனும் புரியுதா

ஆனந்த் தேவியை முறைத்தபடி நின்று இருக்க.... பூங்குழலி தர்ம சங்கடத்தில் விழித்திருக்க...சமையலறையில் இருந்து கையில் தண்ணீர் பாட்டிலுடன் வந்த பூமிநாதன்

🔱பூமியின் பூங்குழலி🔱 Where stories live. Discover now