பாகம் 35

146 23 16
                                    

🔱பாகம் 3️⃣5️⃣

பூமி - SJ சூர்யா இதுக்கு மேல சொல்ல வாய்ப்பு கிடைக்காது போல....அதனால நான் என் காதலை சொல்ற நிலைமையில் இல்லைன்னு அவனே சொன்னான்... அதுக்கு நான் தான் அப்படி எல்லாம் மனச விட்டுறாத...உனக்குன்னு எழுதி வச்ச உயிர் உன்னையே வந்து சேரும் என்று ஆறுதல் சொனனேன்....

என பூமிநாதன் சொல்ல.... பூங்குழலியின் முகம் முழுதும் வினாக்கள் மட்டுமே நிறைந்திருக்க...

பூமி - என்ன பூங்குழலி என்ன ஆச்சு?

பூங்குழலி -

பூமி - ஏன் சட்டுனு அமைதியா ஆகிட்ட

பூங்குழலி - இல்ல பூமி நீங்க என்ன சொன்னீங்க...சூர்யா யாரையோ காதலிக்கிறாரா...

பூமி - ஒய் மக்கு....யாரையோ இல்ல.. SJ சூர்யா அவருடைய மாமன் மகளை சின்ன வயசுல இருந்து காதலிக்கிறானா...ஆனா அந்த பொண்ணு கிட்ட இவன் இது நாள் வரை காதலை சொன்னதே இல்லையாம்....சரி இவன்தான் சொல்லல ஆனா சொந்த மாமன் மகன்தான இவன் மனசுல இருக்குறது... அந்த பொண்ணுக்கு தெரியாமையா இருந்திருக்கும்

பூங்குழலி -

பூமி - ஒருவேள தெரிஞ்சும் ஒரு சில பெண்கள் எல்லாம் ஆம்பளைங்கள அலைய விடுறாங்களே அந்த மாதிரி அலையவிட்டு வேடிக்கை பாக்குறாங்களோ என்னவோ

பூங்குழலி - பூமி.. பெண்களைப் பற்றி அப்படியெல்லாம் தப்பா நினைக்காதீங்க...ஒருவேளை SJ.சூர்யா மனசுல இப்படி ஒரு நினைப்பு இருந்திருந்தால் கண்டிப்பா இதுக்கு நானே ஒரு தீர்வை சொல்லி இருப்பேனே

பூமி - என்ன சொன்ன...நீ சொல்லுவியா..ஏய் அவருடைய மாமன் பொண்ண அவரு காதலிக்கிறாரு.... இதுக்கு நீ என்ன தீர்வு சொல்ல முடியும்

பூங்குழலி - அது....நான்....இல்ல நான் வந்து...

பூமி - ஓ சூர்யா உன்னுடைய கேசை எடுத்து நடத்தினதால நீ அவருக்கு கிட்டத்தட்ட friend மாதிரி ஆயிட்ட போல.... but நட்பாய் இருந்தாலும் ஒரு அளவுக்கு மேல நம்ம அவங்களுடைய பர்சனல் லைஃப்ல தலவிட முடியாது குழலி....அவன் வாழ்க்கையை அவன் தான் பாத்துக்கணும்...அந்த பொண்ண காதலிக்கிறேன்னு அவன்தான் போய் தைரியமா சொல்லணும்....அது வெற்றியா இருந்தாலும் சரி தோல்வியா இருந்தாலும் சரி அந்த நிமிஷமே அந்த விஷயத்தை பேசி கிளியர் பண்ணிக்கணும்....இல்லனா பாரு இத்தனை வருஷம் அந்த பொண்ண மனசுல நினைச்சுகிட்டு இருந்திருக்கிறான்....இப்போ ஏன்டா காதலை சொல்லலன்னு கேட்டா அதுக்கு வழி இல்லன்னு சொல்றான்...பாவம் தான் இல்ல குழலி

🔱பூமியின் பூங்குழலி🔱 Where stories live. Discover now