"தொடாதீங்க" என்று ஒரு குழந்தையின் குரல் கேட்டதும் பூமிநாதன் பூங்குழலியிடம் இருந்து தள்ளி செல்ல..பூங்குழலி சிரித்த முகத்துடன்
பூங்குழலி - என்ன பூமி பயந்துட்டீங்களா யாருன்னு தெரியல நம்ம பக்கத்து வீட்ல இருக்குற குட்டி பொண்ணு தான்
பூமி - ஏன் தெரியாம...பாப்பா இங்க வாங்க உங்க பேர் என்ன சொன்னீங்க
பூங்குழலி - என் பெயர் அம்மு
பூமி - ஒ....சரி அம்மு எப்ப வந்தீங்க
பூங்குழலி - நானும் பாப்பாவும் அரை மணி நேரத்துக்கு முன்னாடி தான் வந்தோம் நீங்க நல்லா தூங்கிக்கிட்டு இருந்தீங்க அதான் உங்கள டிஸ்டர்ப் பண்ண வேணாம்னு டைனிங் டேபிளிலேயே உட்கார்ந்துட்டோம்
பூமி - அப்பா எங்க
பூங்குழலி - நம்ம ரெண்டு அப்பாவும் கடைக்கு போய் இருக்காங்க காபி ஆறிருக்கும் இருங்க வேற எடுத்துட்டு வரேன்
பூமி - நோ நோ பரவாயில்ல இதுவே போதும்
பூங்குழலி - இருக்கட்டும் இருங்க வேற காப்பி எடுத்துட்டு வரேன்
பூமி - வேணா குழலி நீ முதலில் இப்படி உட்காரு....என்ன ஆச்சு உனக்கு... இப்போ வயிறு வலி பரவாயில்லையா...
பூங்குழலி - என்ன வயிறு வலி... யாருக்கு வயிறு வலி
பூமி - உனக்கு தான்.... அப்பா சொன்னாரு உனக்கு வயிறு வலி வந்ததால தான் நேத்து நீ ஷாப்பிங் கூட முடிக்காமல் வீட்டுக்கு வந்துட்டேன்னு
பூங்குழலி - மாமா அப்படியா சொன்னாரு
பூமி - ஆமா ஏன் அப்போ உனக்கு வயிறு வலி இல்லையா
பூங்குழலி - இல்ல எனக்கு வயிறு வலி எல்லாம் இல்ல
பூமி - அப்போ ஏன் நேத்து அப்படி பிஹேவ் பண்ண...வேற ஏதாவது பிரச்சனையா
பூங்குழலி - அது வந்து எனக்கு அந்த ட்ரெய்லர்
என்ன பிரச்சனை சொல்லு குழலி..
என்று பூமி கேட்க.... பூங்குழலி ஏதோ சொல்ல வரும் முன் சந்திரன் உள்ளே நுழைய
YOU ARE READING
🔱பூமியின் பூங்குழலி🔱
Fanfictionஇயல்பான கதை தான்.... தந்தை மகன்... தந்தை மகள் பாசம் பேசும் கதை... வாசித்து நேசியுங்கள் 💕