❤️பூமியின்🔱பூங்குழலி❤️
❤️பாகம் 2️⃣6️⃣
ஐயர் - புள்ளையாண்டா தாலி எடுத்து பொண்ணு கழுத்துல கட்டுங்க.....கெட்டி மேளம் கெட்டி மேளம்
என்று அவர் உச்சரித்த அடுத்த நொடி...
ராஜன் - ஒரு நிமிஷம் இருங்க...
சந்திரன் - டேய் என்னடா என்னாச்சு..??
ராஜன் - ஐயரே அந்த மாங்கல்யதை அப்பா அம்மா கையில தாங்க... அவுங்க கையாள எடுத்து தந்து பூமி மாப்பிளை என் மக கழுத்துல தாலி கட்டட்டும்
சந்திரன் - டேய் ராஜா...???
பூமி - அப்பா.... ராஜன் அப்பா ஆசை படியே முன்னோர்கள் ஆசீர்வதிக்க பெரியவுங்க இவங்க ரெண்டு பேருமே தாலி எடுத்து தரட்டும் பா
என்று பூமி சொல்ல....ராஜனின் இந்த செயலை சற்றும் எதிர்பாராத அவரின் அம்மாவும் அப்பாவும் மன நிறைவோடு மாங்கல்யதை பூமியின் கரங்களில் எடுத்து தர ......பூங்குழலி கண்களில் ஆனந்த கண்ணீர் பெறுக........ சந்திரன் மற்றும் ராஜனின் இதயம் மகிழ்ச்சியில் இணைந்து இருக்க.......பூமி நாதன் அவன் சித்ர பூங்குழலியின் கழுத்தில் மாங்கல்யதை அணிவிக்க..... தன் தந்தையின் கனவு தலை தூக்க வேண்டும் என்று எண்ணம் கொண்டவள்...தலை குனிந்து பூமியின் கரங்களால் மாங்கல்யத்தை பெற்று கொள்ள..... கூடி இருக்கும் அனைவரும் தூவிய மங்கள அரிசி மணமக்களின் தலையில் அட்சதையாக விழ.....
💕பூமியின் பூங்குழலியாக💕மங்கை இவள் மாறிய தருணம் அவள் கண்கள் கலங்குவதை கண்ட பூமி அவளை உற்று பார்த்தவன்...
என்ன குழலி என்னாச்சு... ஏன் அழுவுற.... கண்ணுல அரிசி பட்டுடுச்சா
என்று அக்கறையாக கேட்டப்படி அவள் தலை மேல் இருந்த அட்சதையை தட்டி விட...
டேய் டேய் என்னடா பண்ற..... அதெல்லாம் இருக்கட்டும்... நீங்க ரெண்டு பேரும் முதல்ல ஐயர் சொல்றதை கேளுங்க
என்று சந்திரன் சொன்னதும் பூமி அசடு வழிந்தப்படி ஐயர் சொன்ன சம்பர்த்தாயத்தை செய்து முடிக்க
YOU ARE READING
🔱பூமியின் பூங்குழலி🔱
Fanfictionஇயல்பான கதை தான்.... தந்தை மகன்... தந்தை மகள் பாசம் பேசும் கதை... வாசித்து நேசியுங்கள் 💕