சந்திரன் - வாமா எப்படி இருக்கிற
பூங்குழலி - நல்லா இருக்கேன் மாமா.. நீங்க எப்படி இருக்கீங்க
சந்திரன் - எனக்கென்னமா நல்லா இருக்கேன்
என்று சந்திரன் சொல்ல...பூமியின் விழிகள்... பூங்குழலியை விட்டு நகர மறுத்தது.... தன் தந்தை மேல் அவளுக்கு இருந்த பாசமும் மரியாதையும் அவளின் ரம்மியமான குரலில் தென்பட்டது..
என்னமா கையில காப்பியை வச்சுக்கிட்டு அப்படியே நிற்கிற உன் மாமனுக்கும் மாப்பிள்ளைக்கும் காப்பியை கொடு என்று ராஜன் சொல்ல இவர்களை நோக்கி அடிமேல் அடி எடுத்து வைத்து வந்த பூங்குழலி சந்திரனின் எதிரில் காபி தட்டை நீட்டியவர் இன்னொரு கோப்பையை தன் தந்தைக்கு தர
என்னமா நீ மாப்பிள்ளைக்கு காப்பி தராம எங்க ரெண்டு பேருக்கும் கொடுக்கிற என்று ராஜன் கேள்வி கேட்க.. பூமியின் செவிகள் அவள் பதிலுக்காக காத்திருந்தது
இல்லப்பா உங்களுக்கும் மாமாவுக்கும் பில்டர் காபி பிடிக்கும்னு எனக்கு தெரியும்.. இவருக்கு என்ன பிடிக்கும்னு எனக்கு தெரியாது அதான் அவர் காப்பி டீ பால் எது குடிப்பார்ன்னு கேட்டுட்டு தரலாம்ன்னு நினைச்சேன்
என்று பூங்குழலி சொன்னதும் பூமிநாதனின் கண்களில் மற்றவர்களில் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்கும் பெண்ணாக பூங்குழலி பிரதிபலித்தாள்..
என் பையன் டீ காபி ரெண்டுமே குடிப்பான் நீ ரெண்டுல எது வேணும்னாலும் கொடு மா என்று சந்திரன் சொன்னதும் மின்னல் வேகத்தில் சமையலறைக்குள் பூங்குழலி நுழைய
ராஜன் - மாப்பிள்ளை நீங்க என் பொண்ணுகிட்ட தனியா பேசணும்னு நினைச்சீங்கன்னா மொட்டை மாடியில போய் பேசிட்டு வாங்க
பூமிநாதன் தன் தந்தையை பார்க்க....
போடா ராஜன் இந்த காலத்து மனுஷன் அவனுக்கு எல்லாருடைய உணர்வுகளும் புரியும்.... நீ பூ கிட்ட தனியா பேசணும்னு ஆசைப்பட்டா போய் பேசு
என்று ராஜன் சொல்லி முடிப்பதற்குள் பூமிநாதன் இருக்கையை விட்டு எழுந்தவன் மொட்டை மாடிக்கு எப்படி செல்ல வேண்டும் என்று படிக்கட்டை தேட
YOU ARE READING
🔱பூமியின் பூங்குழலி🔱
Fanfictionஇயல்பான கதை தான்.... தந்தை மகன்... தந்தை மகள் பாசம் பேசும் கதை... வாசித்து நேசியுங்கள் 💕