❤️பூமியின்🔱பூங்குழலி❤️❤️பாகம் 2️⃣1️⃣
பூமி சந்திரன் மற்றும் ராஜன் ஆகிய மூவரும் மாடியில் இருந்து கீழே இறங்க ... படிக்கட்டில் ராஜன் வழுக்கி கீழே விழுந்தவரின் மண்டையில் பலத்த காயம் ஏற்பட்டதும் ராஜன் அதே இடத்தில மயங்கி விழுந்தவரை பார்த்த பூமி "அப்பா" என்று அலற ....
சந்திரன் - டேய் ராஜா என்னடா என்னடா ஆச்சு
பூமி - அப்பா.... ஐயோ ராஜன் அப்பாக்கு தலையில ரத்தம்...
பூங்குழலி - என்ன பூமி என்னாச்சு.....
என்று கேட்டப்படி பூங்குழலி கீழே இறங்கியவள்
மாமா... அப்பாக்கு என்ன ஆச்சு...ஐயோ ரத்தம்...
என்று பூங்குழலியும் பூமியும் மாறி மாறி பதறி போய் ராஜனை பார்க்க.... ராஜனின் பின் தலை முழுதும் ரத்தம் கசிந்ததோடு மயங்கி நிலையில் படிக்கட்டில் விழுந்திருக்க
சந்திரன் - டேய் பூமி... ராஜனை தூக்குடா உடனே ஹாஸ்பிடலுக்கு அழைச்சிட்டு போகலாம்
பூமி - ஐயோ அப்பா இருங்க.....
பூங்குழலி - அப்பா அப்பா என்னை பாருங்க
சந்திரன் - அம்மாடி உன் அப்பாக்கு ஒன்னும் ஆகாது....பதறாத அம்மா
என்று சந்திரன் சொல்ல..... பூங்குழலி பதறியவள் ஒரு துணியை கொண்டு ராஜனின் தலையை இறுக்கி கட்டிவிட..... இவர்கள் மூவரும் ராஜனை பூங்குழலி வேலை பார்க்கும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல....ராஜனுக்கு அங்கு சிகிச்சை நடந்து கொண்டிருக்க... பூங்குழலியும் செவிலியர் என்பதால் ராஜனுக்கு வைத்தியம் பார்க்கும் இடத்தில் அவளும் அவருடன் இருந்த நிலையில்
பூமி - என்னப்பா இது... ராஜன் அப்பாக்கு ஒன்னும் பிரச்சனை இருக்காது இல்ல
சந்திரன் - டேய் இருடா எனக்கும் ஒன்னுமே புரியல.....என்னடா இது....எவ்வளவு ரத்தம்.... அது அவன் வீடு டா....இதுவரைக்கும் எத்தனையோ தடவை அந்த படிக்கட்டுல ஏறி இறங்கி இருப்பான்...கொஞ்சம் ஜாக்கிரதையா இருந்திருக்கணும்....ஐயோ என்ன இது இப்படி ஆச்சு
YOU ARE READING
🔱பூமியின் பூங்குழலி🔱
Fanfictionஇயல்பான கதை தான்.... தந்தை மகன்... தந்தை மகள் பாசம் பேசும் கதை... வாசித்து நேசியுங்கள் 💕