அப்பா அது குழலி உடைய வண்டி தானே... ஏன் அவ வண்டி இங்கே நிக்குது
என்று சொன்னபடி பூமி காரை விட்டு கீழே இறங்க......
அய்யய்யோ இது சூர்யா தங்கி இருக்கிற வீடாச்சே......
என்று சந்திரன் திருதிருவென்று முழிக்க.... இவர்கள் காரை தொடர்ந்து வந்து கொண்டிருந்த ராஜனும் அந்த இடத்தில் சரியாக வந்து சேர....பூமி காரை விட்டு கீழே இறங்கியவன் வீட்டிற்குள் போக முயன்றவன் சட்டென்று அதே இடத்தில் நின்று விட... ராஜனும் சந்திரனும் கேள்வி நிறைந்த முகத்துடன் அவனை பார்க்க...
actually இன்னைக்கு registration இருக்குன்னு குழலிக்கு தெரியும் இல்ல... அப்படி தெரிந்தும் அவ வரலைனா கண்டிப்பா அதுக்கு ஒரு reason இருக்கும் தானே... இப்போ நான் போய் அவ ஏன் இங்க இருக்கானு பாத்தா அது நான் என் குழலியை தர்மசங்கடத்துக்கு ஆளாக்குற மாதிரி அவ feel பண்ணாவா...... so என்னால அத தாங்கிக்க முடியாது.... வேணா அப்பா வாங்க நம்ம வீட்டுக்கு போகலாம்...
என்று சொன்னபடி பூமி அவன் முன் வைத்த காலை பின் எடுத்தவன் காரை நோக்கி செல்ல.... ராஜன் பெருமூச்சு விட்டவன்... சந்திரனின் அருகில் சென்று அவன் கரங்களை பற்றியவன்
டேய் உன்னை கையெடுத்து கும்பிட்டு கேட்டுக்கிறேன் என் மருமகனை இங்க இருந்து கூட்டிட்டு போயிடு.... அவர் மட்டும் சூர்யாவை பார்த்தா அப்புறம் யாரு என்னனு கேள்வி கேப்பாரு... pls டா அவரை உன் வீட்டுக்கு அழைச்சுட்டு போ
என்று ராஜன் கலவரமான முகத்துடன் சொன்னதும் சந்திரன் சூழ்நிலை சரியில்லை என்று உணர்ந்தவர் பூமியை அவரின் வீட்டை நோக்கி காரை விரட்டும் ப்படி சொல்ல
ஏன் பா ராஜன் அப்பா வரலையா...
என்று பூமி கேட்டதும் சந்திரன் சமாளிக்கும் படியாக அவனிடம் கனிவான குரலில்
இல்ல பா அவனுக்கு பக்கத்துல ஏதோ வேலை இருக்காம் அவன் அந்த வேலையை முடிச்சுட்டு அவுங்க வீட்டுக்கு போயிடுவான்
என்று சந்திரன் சொல்ல... சட்டென்று பூமி அவரை தன் காரின் வலது பக்க சிறு கண்ணாடியில் இருந்து பார்த்தவன் அவரின் முகம் பதற்றதுடன் இருப்பதை பார்த்து காரில் இருந்து கீழே இறங்கி அவர் அருகில் சென்று அவர் கரங்களை கனிவாக பற்றியவன்...
YOU ARE READING
🔱பூமியின் பூங்குழலி🔱
Fanfictionஇயல்பான கதை தான்.... தந்தை மகன்... தந்தை மகள் பாசம் பேசும் கதை... வாசித்து நேசியுங்கள் 💕