விமானம் சென்னை ஏர்போர்ட்டில் லேண்ட் ஆக பூமிநாதன் @ பூமி..ஐந்து வருடம் கழித்து அன்று தான் துபாயில் இருந்து தன் தாய் நாட்டிற்கு வந்தான்.
தன் அம்மாவின் மறைவுக்கு பின்பு இந்த ஊரில் அவனுக்கு தன் அப்பா சந்திரணை தவிர வேறு அந்த சொந்தமும் இல்லை ..ஆகையால் தான் அவன் படிப்புக்கு ஏற்ற வேலையை தேடி அவன் வெளிநாட்டுக்கு பயணம் கொண்டான்...
தன் தந்தையை எவ்வளவு முறை அழைத்தும் அவர் அவனிடம் வர மறுத்ததால் இவன் வேறு வழி இன்றி தான் தந்தையின் கடைசி காலத்தில அவருடன் இருக்க வேண்டும் என்று எண்ணி அவனின் ஊருக்கு திரும்பினான்..
பூமியின் ஊர் ஒரு கிராமம் தான்..
எனினும் அங்கே எல்லா வசதியும் இருக்கும் ...ஆகையால் தன் தந்தைக்கு அவன் எல்லா தேவைக்க்களையும் ஏற்பாடு செய்து தந்து இருந்தான்.. ..இத்தனை வருடம் கழித்து தன் மகனின் வருகையை கண்டு சந்திரனின் மனம் ஆனந்தத்தில் அகம் மகிழ்ந்தது ...வா பா பூமி எப்படி பா இருக்குற இப்ப தான் இந்த அப்பாவை பார்க்க உனக்கு நேரம் கிடைச்சுதா..என்று சந்திரன் கண்கள் கலங்கி கேட்டதும் ..அவன் அவரை கட்டி அனைத்தவன்
ஏன் பா அப்படி பேசுறீங்க நான் எங்க இருந்தாலும் உங்க பிள்ளை தான் அப்பா ...எனக்கு மட்டும் என்ன உங்களை பிரிந்து இருக்கணும்னு ஆசையா சொல்லுங்க..என்று சந்திரனை இவன் கட்டி கொண்டான்
சரி சரி நீ களைப்பா வந்து இருப்பா வா பா உள்ள வா..என்று பூமியை இவர் அழைத்ததும் இவன் வீட்டுக்குள் செல்ல அவன் கண்களில் முதலில் தென்பட்டது தன் அம்மாவின் புகை படம் தான்.... சின்ன மாடத்தில் தன் தாயின் புகை படத்தின் அருகில் விளக்கு ஏற்றப்பட்டு ஊது வத்தியின் வாசனை அவன் மூச்சில் கலந்திட்ட தன் தாயின் நினைவுகளை தட்டி எழுப்பியது ....
பூமியின் அம்மாவுக்கு நடுத்தர வயது தான்.. இருப்பினும் நோய் வாய்ப்பட்டு இறந்த அவரின் மறைவை இன்றளவும் இவனால் ஏற்றுக்கொள்ள முடியாத நிலையில் தான் அவன் இருந்தான் ..
பூமியின் கண்கள் கலங்கி நின்று இருப்பவன் அருகில் வந்த சந்திரன் அவனை கட்டி அணைத்தபடி
YOU ARE READING
🔱பூமியின் பூங்குழலி🔱
Fanfictionஇயல்பான கதை தான்.... தந்தை மகன்... தந்தை மகள் பாசம் பேசும் கதை... வாசித்து நேசியுங்கள் 💕