பாகம் 34

122 22 10
                                    

சந்திரன் - இப்ப எதுக்குடா உன் தலையில இடி விழுந்த மாதிரி ஓடி வர

ராஜன் - டேய் இங்க வாடா யாரு நகை கடைக்கு வராங்கன்னு பாரு யாரு

சந்திரன் - என்ன சினேகா வராங்களா

ராஜன் - அடேய் புன்னகை அரசி சினேகா வரல டா....எழுத்தின் எழிலரசி உன் இந்து வரா

சந்திரன் - என்னடா சொல்ற இந்திராவா

ராஜன் - ஆமாடா சீக்கிரம் வா

என்று ராஜன் சந்திரனை அழைத்துச் செல்ல....நகைக்கடைக்குள் சந்திரனின் கல்லூரி தோழி இந்திரா அவர்கள் உள்ளே வருவதை பார்த்ததும் சந்திரனின் முகம் மலர்ந்தபடி இந்திரா அவர்களை காண...

இந்திரா - நீ....நீ நீங்க சந்திரன் தானே

சந்திரன் - யா யா.....ஹவ் ஆர் யூ இந்திரா

இந்திரா -  வாவ் சந்திரன்...... what a ப்ளசன்ட் surprise.......எப்படி இருக்கிறீங்க உங்கள பாத்து எத்தனை வருஷம் ஆச்சு அப்புறம் வீட்ல எல்லாம் எப்படி இருக்காங்க உங்களுக்கு உடம்பு எப்படி இருக்கு

சந்திரன் - நீயே சொல்லு நான் எப்படி இருக்கேன்

இந்திரா - ம் உங்களுக்கு என்ன அப்போ பார்த்த மாதிரியே இப்பவும் ராஜா போல கம்பீரமா இருக்கீங்க

சந்திரன் - ரியலி

இந்திரா - யா யா யா... hai ராஜன்

ராஜன் - எப்படி இந்து இருக்கீங்க

இந்திரா - நான் நல்லா இருக்கேன் ராஜன்... அன்னைக்கு கடையில பார்த்து உன்னுடைய ஃபோன் நம்பர் அட்ரஸ் வாங்குறதுக்குள்ள நீ களம்பிட்ட

ராஜன் - அது என்னுடைய மகளுக்கு நிச்சியம் வச்சிருந்தேன் அந்த டென்ஷன்ல உன்கிட்ட அட்ரஸும் போன் நம்பரும் கொடுக்க மறந்துட்டேன்

இந்தரா - உங்க மகளுக்கு கல்யாணம் எல்லாம் ஆயிடுச்சா?.....ஆமா நம்ம எல்லாருக்கும் பெரிய பெரிய பிள்ளைங்க இருக்கும் இல்ல..... சந்திரன் உனக்கு கல்யாணம் ஆகி குழந்தை எல்லாம் இருக்குமே......

ராஜன் - என்ன நீ நமக்கெல்லாம் 60 வயசு ஆகிடுது... கல்யாணம் ஆச்சா குழந்தை இருக்கான்னு கேக்குற

🔱பூமியின் பூங்குழலி🔱 Where stories live. Discover now