பூமி - ராஜன் அப்பா....
ராஜன் -🙄
பூமி - என் அப்பா சொல்றது உண்மையா
சந்திரின் - அட பாவி... நான் உன்னை பெத்தவன் சொல்றேன்.. நீ என்னடானா இந்த bp வந்த burger பாண்டியணை கேக்குற
பூமி - சும்மா இருங்க பா.. எந்த நேரத்துல ஜோக் அடிக்கிறீங்க.... ராஜன் அப்பா நீங்க சொல்லுங்க... ஜாதகத்துக்கு பயந்துகிட்டு தான் நீங்க எங்க கல்யாணம் சீக்கிரம் நடக்கும்னு சொல்றிங்களா
ராஜன் - இங்க பாருங்க மாப்பிள்ள...
சந்திரன் - உன்னை ரொம்ப நேரம் எல்லாம் இவன்னால close up ல பாக்க முடியாது.... சீக்கிரம் உன் மாப்பிளை கிட்ட விஷயத்தை சொல்லு...
ராஜன் - நீங்க என்னை எவ்வளவு கேவலமா நினைத்தாலும் பரவாயில்ல.. என் மக கல்யாணம் நடக்க நான் என்ன வேணும்னாலும் பண்ணுவேன்.... ஏன் என் உசுர கூட தருவேன்...
சந்திரன் - உசுர தந்துட்டு... என்ன ம....
பூமி - அப்பா
சந்திரன் - அட... இப்போ உசுர தந்துட்டு பிறகு என்ன மண்ணுகுள்ள இருந்தா உன் மகள் வாழும் அழகை பார்த்து ரசிப்பன்னு கேட்க வந்தேன் டா...
பூமி - கொஞ்சம் சும்மா இருங்க பா.... ராஜன் அப்பா உங்களுக்கு ஒன்னும் ஆகாது.... ஏன் தேவை இல்லா விஷயங்களை எல்லாம் நினைச்சு நீங்க உங்களயே கஷ்ட்ட படுத்திக்கிறிங்க
ராஜன் - இல்ல மாப்பிள்ள...நீங்க என் மகளை உடனே கல்யாணம் பண்ணிக்கோங்க... நீங்க கட்டுற தாலி என் மக கழுத்துல தொங்குறதை நான் பார்த்த பிறகு நிம்மதியா போய் சேர்ந்துடுவேன்
பூமி - அப்பா... நான் சொல்ல வரத நீங்க புரிஞ்சிக்கோங்க...
ராஜன் - என் நிலைமையை நீங்களும் புரிஞ்சிக்கோங்க மாப்பிள...என் மகளை நீங்க உடனே கட்டிக்கோங்க
பூமி - அப்பா எனக்கு ஒன்னுமே புரில...... கல்யாணம் எனக்கும் குழலிக்கும் தான்.... so இந்த விஷயத்துல என்னால தனிச்சையா முடிவு எடுக்க இயலாது....so குழலி நீ என்ன சொல்ற...
![](https://img.wattpad.com/cover/315504548-288-k36972.jpg)
YOU ARE READING
🔱பூமியின் பூங்குழலி🔱
Fanfictionஇயல்பான கதை தான்.... தந்தை மகன்... தந்தை மகள் பாசம் பேசும் கதை... வாசித்து நேசியுங்கள் 💕
பாகம் 23
Start from the beginning