சந்திரன் - என்னம்மா எந்திரிச்சிட்டானா உன் பூமிநாதன்.....என்னடா என் மருமகள் வீட்டுக்கு வந்தது கூட தெரியாம இப்படியா இழுத்து போத்திக்கிட்டு தூங்குவ
ராஜன் - எப்படி மாப்பிள்ளை இருக்கீங்க
பூமி - வாங்க அப்பா உட்காருங்க
ராஜன் - நல்லா தூங்குனீங்களா
சந்திரன் - எங்க...நைட் எல்லாம் குழலி ஞாபகத்திலேயே துரை தூங்கல அதான் காலையில இவ்வளவு நேரம் தூங்கி இருக்காரு...
ராஜன் - என்னமா நீ எழுப்பிட்டியா
பூங்குழலி - ஐயோ இல்லப்பா நான் அந்த ரூம் பக்கமே போகல அவரா தான் எழுந்து வந்தாரு.....மாமா என்னை நம்புங்க
சந்திரன் - சரி சரி நாங்க நம்புறோம்
பூங்குழலி - மாமா காப்பி எடுத்துட்டு வரட்டா
சந்திரன் - இல்லடா ம்மா காலையிலேயே நான் குடிச்சிட்டேன்....என்னடா அப்படி பாத்துக்கிட்டு இருக்க
பூமி - ஒன்னும் இல்லப்பா... இவங்க எப்ப வந்தாங்க
சந்திரன் - அரை மணி நேரத்துக்கு முன்னாடி தாண்டா வந்தாங்க..இன்னைக்கு என் மருமக வேலையை லீவு போட்டுட்டு உனக்காக வந்து இருக்கா
பூமி - எனக்காகவா
சந்திரன் - என்னடா கேள்வி இது?என் மருமக உன்னக்காக தான் வந்து இருக்கா
ராஜன் - சரி டா சந்திரா வா நம்ம கிளம்பலாம்
பூமி - அப்பா எங்க கிளம்புறீங்க
சந்திரன் - அடுத்த வாரம் உங்களுக்கு நிச்சயதார்த்தம்...இன்னும் கொஞ்ச நாள்தான் இருக்கு புடவை துணிமணி எல்லாம் வாங்க வேணாமா
பூமி - நிச்சியத்துக்கு யாரை எல்லாம் கூப்பிடனும்....
சந்திரன் - ஊரைக் கூட்டிலாம் நிச்சயம் பண்ணல நம்ப அக்கம் பக்கம் இருக்குறவுங்கள மட்டும் தான் கூப்பிட்டு இருக்கோம் அதனால பூங்குழலி வீட்டிலேயே நிச்சயத்தை வச்சுக்கலாம் ஓகேவா
பூமி - அப்பா நான் ஒன்னு சொன்னா கோச்சுக்க மாட்டீங்களே
சந்திரன் - என்னப்பா சொல்லு
![](https://img.wattpad.com/cover/315504548-288-k36972.jpg)
YOU ARE READING
🔱பூமியின் பூங்குழலி🔱
Fanfictionஇயல்பான கதை தான்.... தந்தை மகன்... தந்தை மகள் பாசம் பேசும் கதை... வாசித்து நேசியுங்கள் 💕
பாகம் 8
Start from the beginning