அத்தியாயம்-07

6.5K 252 6
                                    

மௌனத்தால் வழிந்து
ததும்பும் உணர்வுகள்
வரி வரியாய் பேசும்
வார்த்தைகள் அறியாதது...

கட்டிலில் சாய்ந்து யசோ அமர்ந்திருக்க ஆரஞ்சுப் பழத்தை இளா உரித்துக் கொண்டிருந்தாள். எல்லாரையுமே இப்டி பயமுறுத்திட்டியேடி அவள் தலையை வருடியவாறே சிவகாமி சொன்னார். ஆனால் அவள் பார்வை எதிரே கதிரையில் சாய்ந்தமர்ந்து அவளையே விழியகற்றாது பார்த்திருந்த எழிலின் கண்களை கவ்வியிருந்தது.

இதை சாப்டுக்கா ரொம்ப சோர்வாய்த் தெரியுற..சிறு புன்னகையுடன் வாங்கியவளிடம் இதைச் சாப்டுட்டு சாஞ்சு படுத்திரு களைப்பு போய்டும்.வா இளா டாக்டர்கிட்ட போன அண்ணாவையும் ருத்ராவையும் காணோம் பார்த்துட்டு வந்துடலாம் எப்போ வீட்டுக்கு அழைச்சுட்டு போலாம்னு கேட்கலாம் எழில் இவளை கொஞ்சம் பார்த்துக்க.. அவர்கள் சென்றுவிட இருவரும் பார்த்துக் கொண்டே இருந்தனர். எதுவுமே பேசவில்லை.

எழுந்து நடந்து அவள் அருகே வந்தான். அவள் ஏதோ பேசத் தொடங்க ஷ்ஷ்ஷ்...என அவள் உதட்டில் விரலை வைத்தவன்.. ஐ வான்டு ஹக் யூ..அவள் பதில் சொல்ல முன் அவளை இறுகக் கட்டிக் கொண்டான் தவிச்சுப்போய்ட்டேன்டீ..தலை சுத்துதுன்னா வண்டிய ஓரமா நிறுத்திட்டு போன் பண்ண வேண்டியது தானே..வண்டியோட விழுந்து போனும் உடைஞ்சு...தாங்க் காட் நல்ல வேளை அந்த வயசான பெரியவர் கண்ணுல பட்டிருக்க..அவரா இருக்கப் போய் ஹாஸ்பிடல்ல சேர்த்திருக்கார். உனக்கேதாச்சும் ஆனா நான் மட்டும் எப்டி தனியா இருப்பேன் கண்ணம்மா..அவன் அணைப்பு இறுகியது.

வாழ்க்கை முழுசுக்கும் உன் கூட இருக்கத்தானேடா நான் விரும்பறேன் பட் நீ போறேன்னு சொல்லிட்டு இப்போ என்ன குத்தம் சொல்ற இடியட்..மனசுக்குள் சொல்லிக் கொண்டவள் எதுவும் பேசாது அ வளும் இறுக்கிக் கொண்டாள். ஐ ஆல்சோ நீட் யுவர் ஹக்...கண் மூடி அவன் அணைப்பை அனுபவித்தாள். அவளை விடுவித்து அருகே அமர்ந்து கொண்டவனிடம் ஆரஞ்சு சுளைகளை கொடுத்தாள் அவன் சாப்பிட்டுக் கொண்டிருக்க..சந்தியாவை பார்க்க போகலியா எழில்..சந்தியாவா அது யார் என்ற ரேஞ்சில் பார்த்து வைத்தவன் ஷிட் மறந்துட்டேன்..என்றவாறு போனை எடுத்துப் பார்த்தான் அம்மாவிடமிருந்தும் சந்தியாவிடமிருந்தும் அழைப்புக்கள் குவிந்திருந்தன.

என்ன சொல்ல போகிறாய்..Where stories live. Discover now