அத்தியாயம்-13

6.4K 261 7
                                    


அவன் பார்வை என் வார்த்தைகளையே அறிய
வழியும் கண்ணீர் ஏனோ தெரியாமலே போகிறது
இறுதிவரை...

அன்புள்ள டயரி..

எப்டி இருக்க கொஞ்ச நாளாய் உன்கிட்ட மனசு விட்டு பேச முடியல அதுதானோ என்னவோ மனசு ரொம்ப பாரமாருக்கு.
கடைசியா நாம பேசிக்கிட்டப்போ நான் சந்தோஷமாய் பேசினதா நியாபகம்.

ஆனா டயரி இப்போ அந்த சந்தோஷமெல்லாம் வெறும் நியாபகத்துல மட்டும்தான்..அப்போ மனசு பு(f)ல்லா லவ்..இப்போவும் அதே காதல்தான் பட் கொஞ்சம் கனமாய் நிறைஞ்சிருக்கு.

அவன் பேசறதில்லை என்னோட ஹீ  அவாய்டிங் மீ..நான்தான் தப்பு பண்ணேன் ஆனா மன்னிக்க கூடாதா..என்ன கண்டுக்கறதே இல்ல.

நீ கேலியா சிரிச்சு உன் புருஷன் தானே போய் பேசுனு சொல்றது புரியுது..அவன் அப்டி அவனோட வொய்பா (f) என்ன நெனைக்கவே இல்லை.

என்னோட காதலனா அவன என் மனசு மாளிகைல உக்காத்தி வெச்சிருக்கிறது எங்கே உன்னோடவும் என்னோடவும் மட்டுமே புதைஞ்சி போயிடுமோனு பயமாருக்கு.

கட்டிக்கிட்ட புருஷன்கிட்ட லவ்வை சொல்ல பயப்டுற முதல் பொண்டாட்டி நானாதான் இருப்பேன். எத்தனயோ தடவை சொல்ல ட்ரை பண்ணிருக்கேன். ஆனா முடியல. அவன்கிட்ட போனாலே பேச்சு வரலை..உடம்பு முழுக்க வேர்த்து ஊத்தறது. இதெல்லாம் கூட பரவால்ல எங்க நான் லவ்வை சொன்ன பிறகு நக்கலலாய் சிரிச்சுடுவானோன்னு நெஞ்சு அடிச்சுக்குது.

நம்ம ரொம்ப விரும்புறவங்க நம்மமளோட காதலை நிராகரிக்கறது இருக்கே அதுதான் உலகத்துலயே வேதனையானது..
சும்மாவே என்கிட்ட சரியா நடந்துக்காதவன் இதை போய் சொன்னா...நினைக்கவே பயமாருக்கு.

சாரி டயரி அங்கங்க என் கண்ணீர்துளிகள் உன்னை ஈரப்படுத்திடுச்சு..

உன்னை விட்டா என் சந்தோஷத்தையோ துக்கத்தையோ முழுசா பகிர்ந்துக்கறதுக்கு யாருமே இல்லை.எனக்குள்ளே இப்டி ஒரு காதல் இருக்கறது யாருக்குமே தெரியலை..அவனுக்கே தெரியலையே.

என்ன சொல்ல போகிறாய்..Where stories live. Discover now