உனக்கே உனக்காய்
ஏக்கங்கள் தேக்கிய
உள்ளமொன்று என்னிடத்தில்
நினைவில் அணைக்கிறாய் நீ
நிஜத்தில் தவிக்கிறேன் நான்..எழில் சாப்ட வா..லாப்பில் எதையோ டைப் செய்து கொண்டிருந்தவனிடம் சென்று நின்றாள் யசோ. நான் சாப்டேன்
வேலையா இருக்கேன் டோன்ட் டிஸ்டர்ப் மீ. ஏன் பொய் சொல்ற எழில்..நான் பொய் சொல்றனா ஹாஹா..அது உனக்குதான் பழக்கம். எனக்கு பழக்கமா நான் உன்கிட்ட என்ன பொய் சொன்னேன். நீ சொல்றது எல்லாமே பொய்தானேடி..எழில் திஸ் இஸ் த லிமிட்..அவள் கோபமாய் சொல்ல வேகமாய் எழுந்தவன் என்ன புடிக்காமலேயே ஓகேன்னு சொல்லி கல்யாணம் பண்ணவதானே நீ..புடிக்கலைனா வேண்டாம்னு சொல்லிட்டு போக வேண்டியதானேடீ..அப்றமா புடிச்சிருக்குன்னு பொய் சொல்லி நடிச்ச..கடைசில பிரெண்ட் ஒருத்தியை பாரக்க வந்தேன்னு எங்கிட்ட பொய் சொல்லிட்டு அந்த சிவா கூட நின்னுட்டிருக்க..அவனை புடிச்சிருந்தா..எழில் பேசி முடிக்க முன் யசோதா அவன் கன்னத்தில் ஓங்கி அறைந்தாள்.கன்னத்தை பிடித்துக் கொண்டு அதிர்ச்சியாய் அவன் நிமிர ச்ச்சீசீசீசீ...என்று அருவருப்பில் முகம் சுழித்தவள் உள்ளே வேகமாய் சென்று எதையோ கொண்டு வந்து அவன் முகத்தில் எறிய அது ஒரு திருமண அழைப்பிதழ்..விரித்த போது உள்ளே சிவகுமார் வெட்ஸ் கல்யாணி என்று இருந்தது. கல்யாணி என்னோட பழைய ப்ரெண்ட் சிவகுமாரோட பக்கத்து வீடு ரெண்டு பேருக்குமே மேரேஜ் பிக்ஸ் ஆகிருக்கு அவ சிவகுமார் என்னை வன் சைட்டா லவ் பண்ணது தெரிஞ்சு என்னை பார்க்கனும்னு ஆசப்பட்டு கால் பண்ணி வீட்டுக்கு வர்ரதாதான் சொன்னா உனக்கு புடிக்காதுன்னு நான்தான் எங்க இருக்கேன்னு கேட்டு பீச்சுக்கே போய் அவங்கள பார்த்துட்டு வந்தேன்...ஆனா நீ என்னை எவ்ளோ கேவலமா நினைச்சிருந்தா இப்டியெல்லாம்....ச்ச்சீ அவள் சரிந்தமர்ந்து அழத் தொடங்கினாள்.
நா....நான் அந்த அர்த்தத்துல சொல்லலை..காய்ந்து போன தொண்டையை ஈரப்படுத்தி பேச முயன்றான்..அவளின் கண்ணீரை பார்த்து அவனுக்கும் கண்கள் ஈரமானது..அவள் அருகே சென்றமர்ந்து கண்ணம்மா என்றழைத்தான்..அவனை கையெடுத்து கும்பிட்டவள் போதும் எழில் என்னை இனிமேல் அப்டி கூப்டாத...உனக்கு என்னை பத்தி இன்னுமே முழுசா தெரியாது..நினைவு தெரிஞ்ச நாள்ளெருந்து உன்னை மட்டும்தாண்டா என் மனசுல புருஷனா நினைச்சிட்டிருக்கேன்..எங்க என் காதலை சொன்னா என்ன விட்டு போய்டுவியோன்னு பயந்து பயந்தே எனக்குள்ளேயே பூட்டி வச்சுக்கிட்டேன்..அழுகையோடு எழுந்தவள் கப்பேர்ட்டினை திறந்து ஒரு பெட்டியை தூக்கி அவன் காலடியில் வீசினாள்..உன்னோட ஒவ்வொரு நினைவையுமே என் கூட சேமிச்சு வச்சுக்கிட்டிருக்கேன்.
YOU ARE READING
என்ன சொல்ல போகிறாய்..
Romanceஹலோ பிரெண்ட்ஸ்..இது நான் உங்களோட Share பண்ணிக்கிற என் முதல் நாவல்...Love story தான் பட் என்னோட Style ல சொல்றதால புடிச்சாலும் புடிக்கல்லனாலும் சொல்லிடுங்கப்பா..கதை பத்தில்லாம் நான் சொல்லப்போறதில்ல அத நீங்களே படிங்க..But நாவல்ல 2 ஹீரோ ஹீரோயின்ஸ்..கட்...