கடலாய் விரியும் தொடுவானமா
கனவாய் தெரியும் கானல்நீரா
எது நீ..
ஒன்று தொலைந்து போகிறாய்
இல்லையேல் மறைந்து போகிறாய்..கரும் பச்சை கூட்டங்களாய் ஆங்காங்கே குழுமியிருந்த மரங்களையும் புதர்களையும் கனகட்சிதமாய் கழுவிக்கொண்டிருந்தது மழை.
கார்க் கண்ணாடியை திறந்து முகத்தை நீட்டி ஈரத்துளிகளின் ஸ்பரிசத்தை அனுபவித்துக் கொண்டிருந்தாள் இளமதி.உனக்கென்ன நயன்தாரானு நினைப்பா..தலையை உள்ளே எடு கோபமாய் சொன்னவனை திரும்பிப் பார்த்தாள் போனில் யாரையோ அழைக்க முயன்று தோற்ற கடுப்பு அவன் முகத்தில் தெரிந்தது.அதுதான் போன்ல சுத்தமா கவரேஜ் கட்டாயிடுச்சுல்ல..அப்றம் எதுக்கு திரும்ப திரும்ப போனை தட்டுறீங்க..அப்போ உன்னை மாதிரி மழைல நனைஞ்சிட்டு ப்(f)ல்ம் காட்ட சொல்றியா..ஐயே மழைல நனைறது நயன்தாராக்குதான் ஏகபோக உரிமையா..ஏன் நாங்க நனைஞ்சா மழை மாட்டேன்னா சொல்லும்..இப்போ எதுக்கு நீ நயன்தாராவை கட்டி இழுக்குற..இழுத்தது நானா இல்ல நீங்களா..உங்கிட்ட போய் பேசினேன் பாரு..அவன் அலுத்துக் கொள்ள அப்போ யார்கிட்ட பேச போறிங்க நயன்தாராக்கிட்டேயா..அவள் நயன்தாராவை விட மனமின்றி அதிலேயே நின்றாள்.
தலைக்கு மேல் கைகளை உயர்த்தி பெருசாய் கும்பிடு போட்டு அம்மா தாயே என்னோட தப்புதான் மன்னிச்சுக்க..கொஞ்ச நேரம் வாயை மூடிட்டு இருக்கியா..அவன் கோபத்தை அடக்கியவாறு சொல்ல ஆஹ்..அது! என்ற ரேஞ்சில் பார்த்து வைத்தாள். சீட்டில் சாய்ந்து கண்களை மூடியிருந்தவன் விரல்கள் ஸ்டியரிங்கில் தாளமிட்ட வேகத்தில் அவன் கோபம் தெரிந்தது.
இளா கொஞ்சநேரம் பேசாமல் இருந்து பார்த்தாள் ஐந்து நிமிடத்திற்கு மேல் அவளால் முடியவில்லை அவனைப் பார்த்தால் கண்களை மூடி அவன் அதே நிலையில் இருந்தான்.காரின் டாஷ்போர்டை திறந்தாள் இரண்டு
சென்டர் ப்(f)ரஷ் மின்ட்கள் கிடக்க ஒன்றை வாயில் போட்டு சுவைத்தவாறே அவனை சுரண்டினாள். என்ன..என்றான் எரிச்சலாய் சென்டர் ப்(f)ரஷ் ..நீட்டினாள் அவள்.
YOU ARE READING
என்ன சொல்ல போகிறாய்..
Romantikஹலோ பிரெண்ட்ஸ்..இது நான் உங்களோட Share பண்ணிக்கிற என் முதல் நாவல்...Love story தான் பட் என்னோட Style ல சொல்றதால புடிச்சாலும் புடிக்கல்லனாலும் சொல்லிடுங்கப்பா..கதை பத்தில்லாம் நான் சொல்லப்போறதில்ல அத நீங்களே படிங்க..But நாவல்ல 2 ஹீரோ ஹீரோயின்ஸ்..கட்...