அத்தியாயம்-01

ابدأ من البداية
                                    

காத்திரமான இலக்கிய படைப்புகள்,புது இலக்கிய வரவுகள்,பழைய முதற்தரங்கள்,ஒரு மாத இடைவெளியில் இடம்பெறும் விறுவிறு நியூஸ்கள்,சினி உலகு என சுவாரஸ்ய கான்டன்டுடன் சுடச்சுட அரஸியலும் மணப்பது அவர்கள் இதழ். இதில் முக்கிய பகுதி பூதக்கண்ணாடி.நாட்டின் முக்கிய பிரபலங்களின் இருட்பக்கங்ளை வெளிச்சம் போட்டு காட்டுவது. அண்மையில் நாமல் தாஜுதீன் வழக்கையும் அது அலசியிருந்தது. மக்களிடத்தே பூதக் கண்ணாடிக்கு பலத்த வரவேற்பு.

இந்த பகுதி இளமதியின் முழுப் பொறுப்பு. இதற்கான தேடலில் ஒரு அமைச்சரை அவிழ்க்கப் போய் அவன் வீட்டுக்கே நேரடி விஜயம் செய்து வழிசல் பேர்வழியான அவனிடம் வசமாய் சிக்கி துண்டை காணோம் துணியை காணோமென இளாவும் ராதாவும் விழுந்தடித்து ஓடி வர அது எழில் காதுக்கு எட்டி விட்டது.அதனால்தான் ஒரு மணி நேரமாய் காது ஜவ்வு கிழிய அவன் கத்திக் கொண்டிருந்தான்.

ஐயோ ராமா இப்போவே கண்ணை கட்டுதே..என கதிரையில் அமர்ந்து கால்களை தூக்கி போட்டவளை பார்த்த மேனகா என்னடி உள்ளே செம்ம டோஸ் போல..வெளியே தென் பாண்டிச் சீமையில சாங் பீஜிஎம் கேட்டுது..என கண் சிமிட்டி சிரிக்க அதெல்லாம் மாமா மகன் மரிக் கொழுந்தை சமாளிச்சுட்டா..என்றவாறே கதிரை கைப்பிடியில் வந்தமர்ந்தாள் ராதா. டேய் பாலு 2 கப் டீ டபள் ஸ்ட்ராங்க்... மச்சீ..உனக்கு??..நோடீ ஜஸ்ட் குடிச்சேன்..அப்போ 2 ஏ வாங்கிக்கோ ஆபிஸ் பையனை ஏவினாள். அமைச்சர் வீட்டில் அமானுஷ்யம்..குற்றம் நடந்தது என்ன?? ..டாபிக்கில் அவர்கள் சளசளக்க டீயும் வந்தது.

ருசித்து பருகியவாறே சும்மா சொல்ல கூடாது நம்ம பாவா கட டீய அடிச்சிக்க முடியாது போ..சிலாகித்தாள் இளமதி. அவளை நக்கலாக நோக்கி
மேடம் டைம் பார்த்த நீங்களே 6 அடிக்க பத்து நிமிஷங்களே இருக்கினம்..மாமா மகன் ஓகே அத்தை மகன் ரத்தினத்தை எப்படி சமாளிக்கப் போற நீங்கள்?? என யாழ் தமிழில் மேனகா கலாய்க்க ஐயையோ..என அலறியவாறே ஸ்கூட்டி நோக்கி ஓடினாள் இளா.

காற்றை கிழித்துக் கொண்டு ஸ்கூட்டி பறக்க அவள் வீட்டுக்கு போக முதல் சின்னதா ஒரு இன்ட்ரோ பார்த்துடலாம். வெள்ளை தொள தொளா டீஷர்ட்டில் கறுப்பு கொட்டை எழுத்துக்களில் ஹூ ஏம் ஐ கிறுக்கியிருக்க அதன் குறுக்காய் சன் கிளாஸ். இறுக்கமான லெகின்ஸ் லூஸ் ஹெயார் பளீர் நிறம் குண்டு கன்னங்களோடு சிறிய செர்ர்ரி உதடுகள். பதட்டத்தில் நெற்றி மற்றும் உதட்டின் மேற்பரப்பில் குட்டி குட்டி வியர்வை முத்துக்கள் அவளுக்கு அழகூட்டின. 23 முடிந்து 24 ல் கால் பதித்திருந்த அவளுக்கு 25ல் ஒரு அக்கா அன்பான அம்மா. அப்பாவின் மறைவிற்கு பின்னால் 12ஆவது வயசிலிருந்து வசிக்கிறது அப்பாவோட அக்கா வீட்டில். இவங்களை அன்பாய் பொறுப்பாய் பார்த்துக்கிறது மாமா ரகுதேவனும் அவளுடைய வில்லன் முரட்டு முசுடன் அறுவாமீசை அத்தை மகனார் திருவாளர் ஸ்ரீலஸ்ரீ ருத்ரதேவன் அவர்களும்.

என்ன சொல்ல போகிறாய்..حيث تعيش القصص. اكتشف الآن