போட்டி #10 - 4. பூங்காற்று புயலானது

57 10 1
                                    

நள்ளிரவு. தொடர் வண்டியில் முதல் வகுப்பு பெட்டியில், குளிருக்காக இழுத்து மூடி உறங்கும் மனிதர்களூடே தனிமையில் பயணிப்பதே கிலியை ஏற்படுத்தும் போது, நள்ளிரவில் கழிவறைக்குச் செல்லவேண்டும் என்றால்? சொல்லவா வேண்டும்? கனமான அந்த கதவைத் திறந்து வெளியே சென்றால், அந்த நேரத்தில் ஒரு ஈ, காக்கா கூட உலாவாதே என்ற அச்சமும் சேர்ந்து கொண்டது.

வேறு வழியும் இல்லை. போயே தீர வேண்டும் என்ற நிலைமை. மனதை தைரியப்படுத்திக் கொண்டு, மெல்லமாக உறங்கிக் கொண்டிருப்பவர்களைத் தாண்டிச் சென்றேன். கதவைத் திறந்ததும் ஒரு விதமான சத்தம் கேட்க, பயத்தில் அப்படியே உறைந்துவிட்டேன்.

நிதானித்து கவனித்த போதே அந்த சொற்கள் காதில் விழுந்தது, “முஜே சொசைட்டி மே அக்ஸப்ட் கர்ணா இத்னா முஷ்கில் க்யூ ஹை? மே இன்ஸான் நி ஹு க்யா?”

அலைபாய்ந்து என் கண்கள் அவள் மீது விழுந்தது. வெளிப்புற கதவருகே நனைந்த உடையுடன், துப்பட்டாவை தலை வழியே போர்த்திய வண்ணம் குளிரில் நடுங்கிக் கொண்டு, காடுஞ்ச்சொற்களை வீசிக் கொண்டிருந்தாள்.

“ஹலோ....” கூப்பிட்ட நொடி திகிலில் மூழ்கிவிட்டேன். ஒருவேளை ஆங்கில திரைப்படங்களில் வருவது போல என் பக்கம் திரும்பியவுடன் பேயாக மாறிவிட்டால்? என்ன செய்வது? என்ற பயம்.

அந்தப் பெண் என்னைத் திரும்பிப் பார்க்கும் வரை இருந்த பீதி, அவள் திரும்பியவுடன் வேறு புறமாக வந்தது. அவளோ சரேலென முகத்தை தனது துப்பட்டாவால் மறைத்துக் கொண்டு திரும்பிவிட்டாள்.

நினைத்தது போல பேயோ பிசாசாகவோ இல்லாமல் மானிடனாக இருந்ததே பெரும் நிம்மதிப் பெருமூச்சைப் பெறத் தகுந்தது. எனினும் என்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு, வந்த வேலையை முடித்துவிட்டு திரும்பினேன். அப்போதும் அவள் அதே இடத்தில் நடுங்கிக் கொண்டிருந்தாள்.

என் பெற்றோர்கள், சிறுவயதிலிருந்தே ஊட்டி உரமேற்றி பசுமரத்தாணி போல பதியவைத்துவிட்ட மனிதநேயமும், மனிதாபிமானமும் என்னை அவ்விடத்தை விட்டு நகரொட்டாமல் செய்தது. பார்க்கப் பரிதாப நிலை. கலங்கியதோ என் மனம்…

Contest EntriesWhere stories live. Discover now