போட்டி #1 - 10. இருள்

131 22 7
                                    

கண்களை மெல்ல திறந்தேன் ,எனதருகில் ஒரு டாக்டர் மட்டும் தெரிந்தார், வேறெங்கும் ஒரே இருட்டு.காற்றில் மருந்தின் வாசனை. நான்ஏதோ ஆஸ்பிட்டலில் இருக்கிறேன்என்பது மட்டும் புரிந்தது. கடைசியாகஎன் கார் விபத்தானது மட்டும் தான்நினைவிருக்கிறது. டாக்டரை பார்க்கமுயன்றேன், ஆஆ!!..  சுளீரென வலி. 

" திரும்பாதீங்க.. " 

என்றது டாக்டர் குரல் 

" உங்க கழுத்தில பலமா அடிபட்டுருக்கு,பிழைச்சதே பெரிய விஷயம் ஆனா.."சற்று மௌனமாகி தொடர்ந்தார் டாக்டர் 

" சாரி.. உங்க பார்வை பறிபோயிடுத்து..  " 

நான் திடுக்கிட்டு என் பக்கம்அமர்ந்திருந்த டாக்டரை பார்த்தேன்,அவரது வெள்ளை கோட்டிலிருந்தநேம்பேட்ஜ் மட்டுமே தெரிந்தது.

"அப்போ நீங்க மட்டும் எனக்கு எப்படிதெரியுரீங்க, டாக்டர் சரண்" என்றேன்கோபமாக,

" டாக்டர் சரணா !! அது நீங்க குடிச்சுட்டுகாரோட்டி கொன்ற டாக்டர் பெயராச்சே, நான் வசந்த்"

உடலெங்கும் பயத்தில் நடுங்க, திரும்பினேன். டாக்டர் சரண் இரத்தம்வழிந்த முகத்துடன் என்னை பார்த்துசிரித்தார்.


Contest EntriesWhere stories live. Discover now