போட்டி 9 # 1 காதல் மாயம்

68 11 9
                                    

குழு அ (ஒரு பெண்ணின் கண்ணனோட்டத்தில்):

திருமணத்திற்கு முன்:

பிணக்கம்:

வட்ட நிலவு முகம்
வாழ்நாளெல்லாம் பார்த்திருப்பேன்!
உன் கொஞ்சு தமிழை
உயிருள்ளவரை கேட்டிருப்பேன்!
பூவிழியின் ஈர்ப்பில்
பூவுலகை மறந்திருப்பேன்!

கவி பாடி
காதலுரைத்த நீயோ - இன்று
என் கெஞ்சலைக் கூட
எடுத்துக் கொள்ளாததேனோ?
என்ன பிழை செய்துவிட்டேன்?
என்று நான் ஏங்குவதேனோ?

பூங்காவின் மரத்தடியில்
பூங்கொடி போல காத்திருக்கிறேன்...
காதல் என்றால்
கலகமா? கலக்கமா? நினைத்திருக்கிறேன்...
உருவம் கானல்நீராக
உன் வழியை எதிர்நோக்கிப் பார்த்திருக்கிறேன்...

வாடிவாசல் வழி வந்த காளை போல
வாகனத்தை உதறி வந்தாய்.
எள்ளும் கொள்ளும் முகத்தில் வெடிக்க,
என் குலைநடுங்கச்செய்தாய்.
துள்ளி எழுந்து மரத்தை
தூணாய்த் துணை கொள்ளச்செய்தாய்.

ஒவ்வொரு சொல்லும்
ஓங்கி அடித்தார் போல் உள்ளதடா!
அடித்ததால் கூட
ஆறுதலாய் இருக்குமடா!
காடுஞ்ச்சொற்கள் வீசியது நீ,
கரைத்துவிட்டது என்னவோ என் உயிர்தானடா!

துணையாய் பற்றிய மரமே
துடித்துவிட்டது போலும்...
சிலிர்த்துக்கொண்டிருந்தது
சிலையாய் சமைந்துவிட்டது.
நிலையை உணர்ந்தார் போல்
நிலைகுலைந்துவிட்டது!

புயலில் சிக்கிய
பூங்கொடியாய் நின்ற என்னைக் கண்டனன்.
கண்கள் ம்ரிதுவாக - என்
கைகளைப் பற்றினன்.
கவலை கொள்ளாதே... தத்தளித்தாலும்
கலங்கரை விளக்கை கண்டுகொள்வேன் என்றனன்.

சந்தோஷ சாயலிலே,
சாரலில் ஆடும் மயிலானோம்.
கைகோர்த்துக் கொண்டு மீண்டும்
காதலர்களாய் பிரதிபலித்தோம்.
காதலை நிலைநாட்டிய
கர்வத்தில் மகிழ்ச்சியில் திரும்பினோம், காதலர்களாக....

மற்றுமொரு பிணக்கத்தைத் தழுவும் வரை....

திருமணத்திற்குப் பின்:

Contest EntriesWhere stories live. Discover now