ஆதன் ராகவியிடம் திவ்யா மற்றும் ரிச்சர்ட் இருவருக்கும் திருமணம் செய்து வைக்க பேசியுள்ளதாக கூற ராகவி "நிஜமாவா! ... அம்மா அப்பா ஒத்துக்கிட்டாங்களா? ... திவ்யா ஒத்துகிட்டாளா? ... ரிச்சர்ட் அண்ணா ஒத்துகிட்டாரா? ... ரிச்சர்ட் அண்ணா வீட்ல ஒத்துகிட்டாங்களா?" என்று அதிர்ச்சியில் கேள்வியாக அடுக்கினாள்.
"ரிச்சர்ட் பத்தி கவலைபடாத அவங்க அம்மாக்கு ஓகே ... அவனும் ஒத்துப்பான் ... உங்க அப்பா அம்மா கண்டிப்பா ஒத்துப்பாங்க ... திவ்யா தான் என்ன முடிவெடுப்பாங்கன்னு தெரியல" என்று ஆதன் கூற ராகவி "அக்கா நல்ல முடிவா எடுக்கனும்" என்று ராகவி கூற ஆதன் "நல்லதா நடக்கும் கவலைபடாதிங்க மிஸ்ஸஸ் ஆதன்" என்று கூற ராகவியும் புன்னகைத்தாள்.
வரதராஜன் ஆதனிற்கு அழைத்து திவ்யாவின் திருமணம் ரிச்சர்ட்டுடன் நடக்கட்டும் என்று கூறி விடவே ஆதன் மகிழ்ந்தான். அதே மகிழ்ச்சியுடன் ரிச்சர்ட்டின் தாய்க்கு அழைத்து கூறினான். அவரும் ஆதனையே நல்ல நாள் பார்த்து கூறும்படி கூறினார்.
ஆதன் இதை தன் தந்தையிடம் கூற அவரோ இரு நிகழ்வையும் ஒரே இடத்தில் பொதுவாக கோவிலில் வைத்துக் கொள்ளலாம் என்று கூற ஆதனும் சரி என்றான்.
ஆதனே ஒரு நல்ல நாள் பார்த்து நான்கு குடும்பத்தையும் ஒரே இடத்திற்கு வரக் கூறினான். பெண்ணுக்கு மேக்கப் போட்டு காபியுடன் வர வைத்து பார்க்காமல் கோவிலில் வெளியில் செல்ல தயார் ஆவது போல் இரு பெண்களையும் அழைத்து வந்து நிறுத்தினர்.
ரிச்சர்ட்டின் தாய் முதன் முதலாக திவ்யாவை நேரில் பார்ப்பதால் ஆர்வத்துடன் அவள் அருகில் சென்று திவ்யா கைகளை பிடித்துக் கொண்டார். "உன்னை இப்ப தான்ம்மா நேர்ல முதன் முதல்லா பாக்கறன் ... போட்டோ விட நேர்ல ரொம்ப அழகா இருக்க ... ஆதன் உன்னை பத்தி நிறைய சொன்னான் ... எனக்கு உன்னை ரொம்ப பிடிச்சிருக்கு" என்று ஆனந்தத்துடன் கூறினார்.
"என் அக்காவ யார்க்கு தான் பிடிக்காது" என்று கேட்டவாறே ராகவி திவ்யா தோலை பற்றிக் கொண்டு கூறினாள். திவ்யா வெட்கத்தில் தலையை தாழ்த்தி நின்றாள். "அடடடா வெட்கத்தை பாருங்களேன்" என்று ராகவி கிண்டலாக கூற திவ்யா அவள் கையை தட்டினாள்.