ரகசிய காதலன் - 34

323 24 3
                                    

மலரை காண சென்ற ராகவி அவசரமாக மலரை தனியாக நிற்க வைத்து பேசினாள். "என்ன மலர் போன்ல சொன்னதெல்லாம் உண்மையா" என்று ராகவி கேட்க "ஆமா அக்கா காலையில ப்ரக்னன்ஸி கிட் வச்சி செக் பன்னன் இரண்டு கோடு வந்துச்சி" என்று கூறி அதை எடுத்தும் காண்பித்தாள்.

ராகவி அதை பார்த்து விட்டு பேச்சு வராமல் உறைந்து நின்றிருந்தாள். மலர் அழுக தொடங்க "மலர் அழுவாத" என்று ராகவி கூறினாள். "எப்படி அக்கா அழுகாம இருக்க முடியும் .... தப்பு பன்னிட்டன் தப்பு பன்னிட்டன் ... இளாவே நெருங்கி இருந்தாலும் நா விலகி நின்றுக்கனும் என் மேல தான் தப்பு" என்று மலர் அழுகையுடன் தலையை அடித்துக் கொண்டாள்.

"மலர் ... மலர் அமைதியா இரு" என்று ராகவி அவள் கையை பிடித்து மலரை தடுத்தாள். "எப்படிக்கா அமைதியா இருக்க சொல்ரிங்க ... வீட்ல விஷயம் தெரிஞ்சா என்னை கொன்னே போட்ற மாட்டாங்களா ... அண்ணன் ... அண்ணனுக்கு தெரிஞ்சா ... எவ்வளவு கஷ்டப்பட்டு என்னை படிக்க அண்ணன் அப்பா அம்மா கிட்ட போராட்னான் தெரியுமா ... நா ... நா அவன் நம்பிக்கைய உடச்சிட்டன் ... பாவி நா ... பாவி ... என்னால எல்லாரும் அசிங்கப்பட போறாங்க ... நா குற்றவுணர்ச்சிலே சாக போறன் ... என்னை வீட்ல இருக்கவங்க ஏத்துக்கலன்னா நா உயிரோடவே இருக்க மாட்டன்" என்று மலர் புலம்பினாள்.

"தப்பு உன் மேல மட்டும் இல்லை மலர் அமைதியா இரு முதல்ல ... இந்த மாதிரி நேரத்துல நீ எமோஷனல் ஆகக் கூடாது" என்று ராகவி கூறி அவளை சமாதானம் செய்ய முயற்சித்தாள்.

"இல்லைக்கா என் மேல தான் தப்பு" என்று மீண்டும் மலர் தலையில் அடித்துக் கொள்ளவும் அப்படியே மயங்கி சரிந்தாள். ராகவி அவளை பிடித்தவாறே தரையில் அமர்ந்து அவள் தலையை மடியில் தாங்கி அவள் கன்னத்தை தட்டி எழுப்ப முயற்சித்தாள்.

மலரினே பையில் இருந்த தண்ணீரை எடுத்து மலர் முகத்தில் தெளித்தும் மலர் எழுந்துக் கொள்ளாததால் ராகவி ஆட்டோவை அழைத்து அவளை மருத்துவமணைக்கு அழைத்துச் சென்றாள்.

எப்படியும் மருத்துவமனையில் அனுமதித்தால் மலரின் கருவை பற்றி தெரிந்து விடும் அத்தோடு இவளுக்கு திருமணம் ஆகவில்லை என்பது மலரின் கழுத்தை பார்த்து சந்தேகித்தால் என்ன செய்வது என்று யோசித்த ராகவி அவள் கையில் இருந்த ஓர் மோதிரத்தை மலர் கையில் மாட்டி இவள் கிருத்துவ பையனை திருமணம் செய்துக் கொண்டாள் என்று கூறி விடுவோம் என்று தன்னை தயார்படுத்திக் கொண்டாள்.

ரகசிய காதலன்حيث تعيش القصص. اكتشف الآن