கண்ணுக்கெட்டும்
தூரம் முட்டும்
பச்சை பட்டுடுத்தி,ஐப்பசியில் விதை விதைச்சா
தை மாசம் தளிர்த்து நிற்கும்
அறுவடைக்கு அழைப்பு விடுத்து...மூன்று போகம்
விளைந்த பூமி- நாங்கள்
நாளும் பொழுதும்
தொழுத சாமி...விதிப் பயனோ
வில்லங்க வினையோ!விவசாய பூமி
இப்போ விசவாயு
காடா போச்சு...எண்ணெய் எடுக்க
எண்ணி
மண்ணை கெடுத்து
சென்றீர்...வண்ண வார்த்தைகளின்
ஜாலத்தில் வீழ்ந்திட்ட
சின்ன குழந்தைகளாய்
ஆகித்தான் போனோம் இப்போ...கண்ணீர் துடைக்க -உங்கள்
கரங்கள் கேட்டிருந்தோம்...
கருணை எஞ்சியிருந்தால்
காப்பாற்ற வாருங்கள்...
_________________________
Edho try panniruken... Enaku therinja alavuku... Idha pathi eludha ninachen... Eludhiten..Thank you 😘 for reading
YOU ARE READING
சிருவாடு
Poetryகொஞ்சம் கொஞ்சமாக சேமித்து வைக்கும் பணத்தை கிராமங்களில் சிருவாடு (சிறுசேமிப்பு ) என்றுக் கூறுவதுண்டு... கொஞ்சம் கொஞ்சமாக update செய்யவிருக்கும் இந்த கவிதைத் தொகுப்பிற்க்கும் அதனால் சிருவாடு என்ற தலைப்பு... எப்படி?! please.. மொக்கையா இருந்தாலும்...