சுகமானதோர் சூழல்...
ஆழ்ந்த நித்திரை...
சட்டென்று அலறல் சத்தம்...
விழித்ததும் சூழ்ந்தது இருள்...
இனம் புரியாத பயம்...
வெளியேற வழியுண்டா?
அலைந்தன என் கைகள்...
உதைத்தன என் கால்கள்...
தவித்தது என் நெஞ்சம்...இதோ!
கண்டுகொண்டேன்!!விரைந்தேன் வாயிலுக்கு...
வெளியேறினேன்
வசந்தத்தை விட்டு...இது என்னது?
புதிய சுற்றம்,
புதிய உணர்வு,
புதிய காற்று....நான் அறிகிலேன்...
திரும்பிச் செல்ல வழியுண்டா?
அதுவும் அறிகிலேன்...இரு கரங்கள் வந்து
அரவணைத்தன என்னை...இதோ!
இது நான் அறிந்ததுவே!!
உணர்ந்ததுவே!!இதமாக இரு இதழ்கள்
தொட்டுப் பிரிந்தது
என் கன்னம்...முதல் முத்தம்!!
மெல்லத் திறந்தன
கண்கள்...குளமான விழிகள்,
பூரித்த இதழ்கள்,
இதமான அன்புடன்எனை கருவறை
தாங்கி வளர்த்த
அன்னை!!!______________________________________
______________________________________
அம்மா!!!
உம்மா!!!
😘😘😘😘எப்படி இருக்கு.... மொக்கையா இருக்கா??
எதாச்சு சொல்லுங்கப்பா...
பார்த்ததும் அப்படியே போயிடாதிங்க...
Read, vote, comment...
Ok??... Ok...
YOU ARE READING
சிருவாடு
Poetryகொஞ்சம் கொஞ்சமாக சேமித்து வைக்கும் பணத்தை கிராமங்களில் சிருவாடு (சிறுசேமிப்பு ) என்றுக் கூறுவதுண்டு... கொஞ்சம் கொஞ்சமாக update செய்யவிருக்கும் இந்த கவிதைத் தொகுப்பிற்க்கும் அதனால் சிருவாடு என்ற தலைப்பு... எப்படி?! please.. மொக்கையா இருந்தாலும்...