இருக்க......மூர்த்தி மனதில் பயம் சூழ்ந்து இருந்தது...

மறுபக்கம்....

தன் அறையில் ஜீவாவும், மீனாவும் எதுவும் பேசாமல் மனதில் அமைதியை

சுமந்துகொண்டு படுத்திருக்க... திடீரென்று மீனாவின் கைபேசி மணி ஒலித்தது

மீனா பதற்றத்துடன் கைபேசியை எடுத்து..பார்த்தவள்

மீனா : ஜீவா... ஜீவா.. இதோபார் நமக்கு வீடியோ வந்ததே... அந்த நம்பரில்

இருந்து தான் அழைப்பு வருகிறது...

ஜீவா : குடு நான் பேசுகிறேன்...

மீனா : வேண்டாம் ஜீவா ...நாம் எதையாவது பேசப்போய் ...

நாமே நம் தவறை ஒத்துக் கொண்டது போல் ஆகிவிடும்... ஆகையால் நாம்

இந்த கைப்பேசியை... உபயோகிக்காமல் இருப்பது தான் நல்லது.... நீ ...நாளை..

முதல் வேலையாக.... உனக்கு ஒரு சிம் கார்டும் ...எனக்கு ஒன்றும்

வாங்குகிற....... வலியையைப் பாரு ...

என்று மீனா சொல்ல ...ஜீவா அமைதியாக ...மனதில் பல குழப்பத்துடன்

படுத்து இருந்தார்...

மறுபக்கம்....

hallil ...கண்ணா.... ஒருபுறம் இருக்கையில் அமர்ந்திருக்க... அவன் எதிரில்

ராதா அமர்ந்துகொண்டு.... ராதாவின் கைபேசியை பார்த்துக்கொண்டிருக்க

....ராதாவின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்த கண்ணன்.... அவளின்

அழகில் மயங்கி.... வைத்த கண் எடுக்காமல் பார்த்துக் கொண்டு இருந்தவனை

பார்த்த ......முல்லை

முல்லை : என்ன கண்ணா ...இன்னிக்கி" டியூப்லைட் "பிரகாசமாக ஏறிகிறது....

ராதா: ஏன் அக்கா... ஜோக் ஏதாவது மாத்தி இருக்கிறீர்களா....

என்று ராதா தன் வீட்டிலிருக்கும்.... டியூப் லைட்டை பார்த்து கேட்க.. .....

கண்ணனுக்கு புரிந்தது அண்ணி எதை பற்றி சொல்கிறாள் என்று

முல்லை : அப்புறம் ராதா... இருவரும் எங்கெல்லாம் சென்று வந்தீர்கள்...?

💞 கதிர்வேலனின் வைரம் முல்லை💞Where stories live. Discover now