பாகம்..183
ஜீவாவின் கைப்பேசிக்கு.... அழைப்பு வர..... ஜீவா மருத்துவ மனையில்
என்ன ஆனது.... என்று ஆயிரம் கேள்விகள் தனக்குள் சுமந்தபடி
மருத்துவமனைக்கு போக....
வாசலில் மீனா அமர்ந்திருக்க.... ஜீவாவை பார்த்தவுடன் மீனா ஓடி வந்து
கட்டிப்பிடித்து....
ஜீவா : மீனா என்ன ஆனது உனக்கு... நீ எப்படி இங்கே ...ஏன் இவ்வளவு
பதட்டமாக இருக்கிறாய்...?
மீனா : உனக்கு அறிவு இருக்கா டா ... நான் உன்னிடம் என்ன சொன்னேன்
....என் தோழியின் வீட்டிற்கு போகிறேன்... என்னை வந்து அழைத்துப்
போ ...என்று தானே சொன்னேன்... நீ வர தாமதமானதால் ....நானே ஒரு
ஆட்டோவை பிடித்து நம் வீட்டிற்கு வரும் வழியில்....
அந்த ஆட்டோக்காரன் ...என்னிடம் ....இன்னும் ஒரு பெண்... அங்கு
தனியாக நிற்கிறார்.... நாம் அவளையும் ஏற்றிக்கொள்வோமா ...என்று
கேட்க ....நானும் சரி தனியாகத்தானே போகிறோம்... இன்னொரு பெண்
வந்தால்... நமக்கு துணையாக இருக்கும்.... என்று நினைத்து ....அந்தப்
பெண்ணை நான் வரும் ஆட்டோவிலேயே ஏற்ற சம்மதித்தேன் ....
அந்த ஆட்டோக்காரன் எங்கள் இருவரையும் ஆட்டோவில் சுமந்தபடி
ஆட்டோவை நேராக ஒரு காட்டுப்பகுதியில் கொண்டு செல்ல ....அந்த
ஆட்டோக்காரர் இறங்கி எங்கள் இருவரிடமும் தவறாக நடக்க
முயன்றார்....
என்னுடன் வந்த அந்தப் பெண் என்னை காப்பாற்று வதற்காக..... அந்த
ஆட்டோ காரனை அருகில் இருக்கும் கட்டையால் அடித்தாள்....ஆத்திரம்
தாங்காத அவன்.... அவனிடம் இருக்கும் ஆயுதத்தைக் கொண்டு என்னை
குத்த வர .....அந்தக் கத்தியை தனது கைகளால் பிடித்த ... அந்த
பெண்ணிற்கு கை முழுவதும் இரத்தம் ....அதன்பின் அங்கு 2....3 ...பேர் ஓடி
YOU ARE READING
💞 கதிர்வேலனின் வைரம் முல்லை💞
Humorநான் எதுவும் குறிப்பிட்டு சொல்வதற்கு இல்லை படிச்சு பாருங்க புடிச்சா கதையை தொடர்ந்து படிங்க.. இது நான் படித்ததில் பிடிச்சது.. அவுங்ககிட்ட கேட்டு post பண்றேன் 😁😁