பாகம் 192...
ஜீவா ; ஏதோ சொல்ல வருவதற்குள்....
மீனா : அது... அதுவந்து... ஜீவாவின் கைப்பேசி உடைந்துவிட்டது... நாங்கள்
அதை சரி செய்வதற்காக ...மொபைல் சென்டரில் கொடுத்து இருக்கிறோம்...
கதிர்: அப்படியா எப்போ அண்ணா...,?
மீனா : இன்று காலையில்தான்... சரி ஜீவா வா... உனக்கு தலை வலிக்குது
என்று சொன்னியே ... நான் தைலம் தேய்த்து விடுகிறேன்.என்று
வலுக்கட்டாயமாக ஜீவாவை மீனா அழைத்துப் போக
ராஜாவை பார்த்த கதிர் .... ராஜா இதில் ஏதோ பிரச்சனை இருக்கிறது என்று
இருவரும் தனக்கே உரிய மௌன பாஷையில் தன் கேள்விக்கான பதில்களை
மாற்றிக் கொண்டார்கள்...
முல்லை : சரி.... ராஜா நீ நேரத்தோடு மகாவை அழைத்துக்கொண்டு போய்
படு.... நாளை மகாவிற்கு மீண்டும் பரிசோதனை இருக்கிறது..என்று சொல்ல
ராஜாவும் ,மாகவும் தனது அறைக்குள் உறங்கச் சென்றார்கள்...
பார்வதி, முருகன், லட்சுமி, அவர்கள் மூவரும் நாங்களும் உறங்க
செல்கிறேன்... என்று சொல்லி அவரவர் அறைகளுக்கு செல்ல...
இரவு 10 மணி அளவில்..... மூர்த்திக்கு... மீண்டும் கைபேசி மூலம் அழைப்பு
வர...
மூர்த்தி : ஹலோ யாரு..?
ஒருவன் v : நான் தான் அப்பொழுதே சொன்னேனே... என் குரலை நீ ஞாபகம்
வைத்துக்கொள்........ நான் உன்னை விரைவில் உன் வீட்டில் வந்து
சந்திப்பேன்........என்று...அதுவும் ஆதாரத்துடன் வருவேன்..........உன்னிடம்
இருப்பவள்....... என் மகள் என்ற ஆதாரத்துடன் ......
என்று V சொல்ல ....மூர்த்தி..பயந்து கொண்டு தனது போனை சுவிட்ச் ஆப்
செய்ய...
தனம் தன் வீட்டின் 6 செல்வங்களை கட்டி பிடித்து படுத்து கொண்டு
YOU ARE READING
💞 கதிர்வேலனின் வைரம் முல்லை💞
Humorநான் எதுவும் குறிப்பிட்டு சொல்வதற்கு இல்லை படிச்சு பாருங்க புடிச்சா கதையை தொடர்ந்து படிங்க.. இது நான் படித்ததில் பிடிச்சது.. அவுங்ககிட்ட கேட்டு post பண்றேன் 😁😁