🔱யின்
♥️கதிர் வேலனின் வைரம் முல்லை ♥️
Épisode 18
மறுநாள் காலை கதிரும்,முல்லையும் தனது வீட்டுக்கு கிளம்பி
கொண்டு இருந்தார்கள்.
பார்வதி: இந்தா முல்லை
முல்லை: என்ன அம்மா இது
பார்வதி: இதுல ரவை லட்டு இருக்கு வீட்டுக்கு கொண்டு போ
முருகன்: இந்தா மா இதுல முடக்கதான் கீரை இருக்கு அக்காவுக்கு
சமையல் செய்யும் போது இதை சேர்த்து செய்து குடுங்க ரொம்ப நல்லது
கதிரும் முல்லையும் கிளம்பினார்கள்.
பார்வதி ,முருகன் அவர்களை மனநிறைவோடு வழி அனுப்பிவைத்தனர்.
வண்டியில் போகும் போது கதிர் முல்லை யிடம் உங்க அப்பா நல்லவரு தான் இல்ல என்றார்.
முல்லை: என்ன புதுசா
கதிர்: இல்ல அம்மாவை நம்ம நல்லா தான் பார்த்து கொள்கிறோம்.
ஆனா நமக்கு பிடித்தவர்கள் மீது நாம் காட்டும் அன்பே அவர்கள் அடுத்த கட்டத்துக்கு நகர முடியாமல் போகிறது
முல்லை: என்ன சொல்றீங்க,எனக்கு புரியல
கதிர் : இல்ல முல்லை அண்ணிக்கு யாராவ்து குழந்தை இல்லைன்னு
சொன்னால் ,நாங்க மூணுப்பேரும் தான் இருக்கிறோமே என்று
சொன்னோம். ஆனா அண்ணிக்கு குழந்தை முக்கியம் என்று நாங்க
நினைக்கல. அம்மாவுக்கு கூட பாரு ,நம்ம ஒருவரை மாற்றி ஒருவர்
அவர்களை நல்லா பார்த்துக் கொள்கிறோம், அதுனால தான் அவர்களும் நடக்க கூடும் என்பதையே மறந்துவிட்டோம். நம்ம பாசம் காட்டுவது அக்கறை காட்டுவது இது எல்லாமே நல்லது தான், அனா அது அவர்களை அடுத்த கட்டத்துக்கு கொண்டு போகணுமே தவிற,அதே இடத்தில் நிக்க வைக்க நம் பாசமே இடையுறா இருக்க கூடாது.
முல்லை: அப்படி பண்ணா நம்ம மாறிட்டோம்ன்னு நினைக்க
மாட்டங்களா?
கதிர்: நல்ல மாற்றம் நன்மைக்கு தானே.
முல்லை: அப்ப நானும் மாற போறேன்.
கதிர்:ஐயோ என்னவா மாற போற,,,,மறுபடியும் முதல்ல இருந்த தா...
முல்லை: இல்லங்க இனி நானும் உங்களை மாமான்னு தான் கூப்பிட
போறேன்.
கதிர்: ஏன் எல்லாரும் நம்மல நக்கல் பண்ணர்துக்கா
முல்லை: யாரு என்ன சொன்னாலும் நான் உங்களை மாமான்னு தான்
கூப்பிடுவேன் மாமா....சரியா மாமா...வண்டிய ரோட பார்த்து ஓட்டுங்க மாமா....
கதிர்: நீ என்னமோ முடிவு பண்ணிட்டா பண்ணு பண்ணு....
Episode 19
முல்லையும் கதிரும் ஜோடியாக வீட்டுக்குள் நுழைவதை பார்த்த
லட்சமியம்மா தனம் அங்கே பாரு ரெண்டு பேரையும்,இவங்கள இப்படி பார்க்கவே சந்தோஷமா இருக்கு என்றார்கள்.
கண்ணா:கதிர் அண்ணா மாமியார் வீட்டுக்கு போய் இவ்வளவு
சந்தோஷமா வரும்ன்னு நான் நினைக்கவே இல்ல.
மீனா: அவரு ஒண்ணும் உன் ஜீவா அண்ணன் மாதிரி இல்ல,
கண்ணா: எங்க முல்லை அண்ணியும் உங்களது மாதரி இல்ல
மீனா: டாய் கொண்ணுடுன் உன்னை. இருவரும் உள்ளே வர
தனம் வா முல்லை ,வாடா கதிரு, எப்படி இருக்க என்று ஆவலுடன்
விசாரிக்க .
கதிர்: நல்லா இருக்கேன் அண்ணி.
மீனா:ஏங்க ரெண்டு நாள் தானே ஆனது அதுக்குள்ள இப்படி பதறுறிங்க.
லட்சுமி: மீனா,இந்த பாசம் எல்லாம் இப்போ உனக்கு தெரியாது உனக்கு பிள்ளை பிறக்கும் இல்ல அப்போ அந்த உணர்வு தெரியும். என்னடா கதிரு என்ன சொன்னான் உன் மாமா?அங்கே எல்லாம் நலம் தானே
கதிர்: எல்லாரும் நலம் தான் அம்மா நீங்க எப்படி இருக்கீங்க
லட்சுமி:நல்லா இருக்கேன் டா ,உங்க ரெண்டு பேரையும் இப்படி
பார்க்கும் போது மூர்த்தி தனத்தை பார்ப்பது போலவே இருக்கு.
மீனா: ஒரு தனத்தின் அளப்பரையே தங்கமுடியல,இதுல இன்னொன்னு வேற யா(மனதுக்குள் நினைத்தால்).
கதிர்: சரி அண்ணி நான் அப்படியே கடைக்கு கிளம்புகிறேன்.
தனம்: மதியம் யராவது வந்து சாப்பிட்டுட்டு மத்தவுங்களுக்கு சாப்பாட்டு எடுத்துக்கிட்டு போங்க.
மீனா: ஜீவாவ வர சொல்லுங்க.
கண்ணா: ஏன் அவுங்க எல்லாம் பட்டின்னி இருக்கவா.
மீனா கண்ணனை முறைக்க
கதிர் பார்வையால் முல்லைக்கு சென்று வருகிறேன் என்று சொல்லி
கிளம்பினார்...கதிர் போன பிறகு முல்லை தன் வீட்டில் கதிர் வந்தவுடன் தன்னோட அம்மா,அப்பா சந்தோஷ பட்டத்தையும், அவர்களின் கல்யாண நாளைக்கு அன்பளிப்பு வாங்கி தந்த தாகவும் அனைவரிடத்திலும் சொல்லி சந்தோஷ பட
மீனா: என்னங்க தை பூசம் முடிந்ததா
கண்ணா: தை பூசம் ஏப்பையோ முடிந்ததே
முல்லை: டாய் நீ உள்ள போடா போய் ரவா லட்டு சாப்பிடு. ஏங்க மீனா
நீங்க வேற அவன் இருக்கும் போது கேக்ரீங்க , என்னன்னு தெரியாமல்
அவன் முடிந்ததுன்னு சொல்றான்
.
மீனா:அவன், கிடக்கிறான் நீங்க சொல்லுங்க.
முல்லை வெட்க படுவதை பார்க்கும் போதே மீனாவும், தனமும் ஓகே
ஓகே என்றார்கள்...
முல்லை: அப்புறம் அக்கா கோவில்ல பெரியம்மா, ஜெகா அண்ணாவை பார்த்தோம்.
தனம்: ஐயோ நான் அடுப்பில் குழம்பை நிடுத்த மறந்துட்டேன். தனம்
அந்த இடத்தை விட்டு சென்று விட
மீனா :என்னன்னு தெரியல கோவில்ல அவுங்க யாரும் இவுங்க கூட
பேசவே இல்லை...
முல்லை (மனசுக்குள்) இது எங்க போய் முடிய
போகுதுன்னு தெரியல என்ற படி நின்றாள்.
Épisode 20
மதிய நேரம் கதிர் கடைக்கு சாப்பாடு கொண்டு போக வீட்டுக்குள்
வந்தார்.
கதிர்: அண்ணி அண்ணி.... சாப்பாடு ரெடியா இருக்கா? நான் சாப்பிட்டுட்டு கடைக்கு சாப்பாடு கொண்டு போறேன்.
தனம்: ஏண்டா மாமா வரல ?
கதிர்:இல்ல அண்ணி நான் ஒரு வேலையாக வெளியே வந்தேன்
அண்ணன் போன் பண்ணி என்னை சாப்பிட்டுட்டு கடைக்கு சாப்பாடு கொண்டு வர சொன்னது...சரி அண்ணி நீங்க ரெடி பண்ணுங்க, நான் கை கால் கழுவி விட்டு வருகிறேன்.
கதிர் பின்புறம் போக, தனமும் சாப்பாடு கட்டி தர சமையல் அறைக்கு செல்ல
முல்லை: மாமா மாமா ....
தனம் : என்னா முல்லை ,மாமா வரல கதிர் தான் சாப்பாடு கொண்டு
போக வந்து இருக்கிறான்.
முல்லை: அக்கா நானும் அவகளை தான் கேட்டேன்..
தனம்: இது எப்போதில் இருந்து...நீ எங்கையோ போய்ட்டா முல்லை.
முல்லை வெட்கத்துடன் சிரத்தாள்
தனம்:சரி சரி எல்லாரும் சப்பிட்டாங்க,இங்கே கடைக்கு சாப்பாடு கட்டி வைத்து இருக்கிறேன் கதிர்.... ..இல்ல இல்ல.. உங்க மாமா வந்த பிறகு அவருக்கும் சாப்பாடு போட்டுட்டு நியும் சாப்பிடு,நான் பக்கத்து வீட்ல போய் அந்த
பொண்ணுக்கு சாப்பாடு குடுத்துட்டு வரேன், பாவம் கை குழந்தைய
வைத்துக் கஷ்டப் படுது.... நான் வரேன் பார்த்துக்கோ
என்று சொன்ன தனம் கிளம்பினாள்,
கதிர் சமையல் அறைக்குள் நுழைய முல்லை சாப்பாடு எடுத்து
வைத்துக்கொண்டு இருக்க
கதிர்: அண்ணி எங்க வைரம் .
முல்லை: என்னது வைரமா ..
கதிர்: ஆமா நான் உன்னை எய்...இந்தா... இப்படிலாம் தான் சொல்லி
கூப்பிடுறேன்னு சொன்ன இல்ல, அதான் உன்ன இனிமே நான்
வைரம்ன்னு தான் கூப்பிட போறேன்.
முல்லை: எல்லாரும் இருக்கும் போது கூடவா?
கதிர்: நீ எப்போது எல்லாம் என்னை மாமான்னு கூப்பிடுறியோ
,அப்போது எல்லாம் நானும் வைரம்ன்னு தான் கூப்பிடுவேன். சரி
அண்ணி எங்கே?
முல்லை: அக்கா பக்கத்து வீட்டுக்கு போய் இருக்காங்க,நம்மல சாப்பிட சொன்னாங்க.
கதிர்: என்னா அண்ணியில்லையா இதை முன்னாடியே சொல்ல
கூடாது. கதிர் முல்லை எதிர் பார்க்காத நேரத்தில் அவளை அணைத்தபடி அவள் கன்னத்தில் ஆசையாக முத்தமிட்டார்.
முல்லை: ஏங்க யராவ்து வர போறாங்க , வாங்க சாப்பிடலாம்
.
கதிர்: நியும் வா ஒண்ணா சாப்பிடலாம்,
முல்லை பறி மாற கதிறே முல்லைக்கு சாப்பாடு ஊட்டி விட்டார்.
கதிர்: ஆமா உனக்கு எப்படி இந்த ஐடியா வந்தது?
முல்லை: என்ன ஐடியா?
கதிர்: இல்ல... எல்லாரோட போட்டோவையும் ஹல்ல (hall) மாட்ட
வேண்டும்ன்னு சொன்னியே அதை கேட்டேன்.
முல்லை: அது..இங்கு நான் வாழ வந்த பிறகு... நம்ம கூட்டு
குடும்பமா வாழும் போது நம்ம செய்ற எல்லா விஷயமும் யோசித்து
எல்லாருக்கும் அது நல்லதான்னு பார்த்து தான் செய்ய வேண்டும் என்று தெரிஞ்சுகிட்டேன், அதான் அப்படி சொன்னேன்.
கதிர் முல்லையை பார்த்து பெருமையுடன்... நீ சொல்வது கூட சரிதான்..அதான் கையோட ஃப்ரேம் போட தந்து விட்டேன், நைட்
தந்துடுவாங்கன்னு நினைக்கிறேன், சரி நான் உன்னிடம் ஒன்னு
சொல்லவா?
முல்லை: சொல்லுங்க என்ன வேணும்
கதிர்: இங்கிலீஷ் எல்லாம் எனக்கு தெரியாது, அதுனால தமிழ் ல
சொல்றேன், நான் உன்னை காதலிக்கிறேன்.
முல்லை: நானும் தான், உங்கள விட அதிகமாகவே உங்கள காதலிக்கிறேன் .
கதிர்: ஐயோ மணி ஆகுது நான் கிளம்புகிறேன் அங்கே எல்லாம் பசியில் இருப்பாங்க. என்றபடி , கடைக்கு சாப்பாடு கூடையை எடுத்துகொண்டு கிளம்பினார்....
இரவு நேரம் மீனா ,முல்லை,தனம் கண்ணா,லட்சுமி யம்மா எல்லாம் ஒன்றாய் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தார்கள்.
மூர்த்தியும்,ஜீவாவும் உள்ளே வந்தனர்.
தனம்: எங்க மாமா கதிர்?
மூர்த்தி: அவன் எதோ முக்கியமான வேலை இருக்குன்னு போய்
இருக்கான்.
தனம் : அப்படியென்ன முக்கியமான வேலையென்று கேட்க ,கதிரும்
அதே சமயத்தில் ஒரு பெரிய பையுடன் உள்ளே வந்தார்.
மூர்த்தி: என்னடா இது?
கண்ணன் சொல்லிக்கொண்டு இருக்கும் போதே அண்ணன் எனக்கு தான் எதோ வாங்கிக்கொண்டு வந்து இருக்கு என அதை பிடுங்கினான்.
முல்லை உடனே இரு இருடா..... என்று அதை வாங்க..
முல்லை: நான் பிரித்து கொடுக்கிறேன், மாமா இந்தாங்க இந்த பையை பிடிங்க.
மூர்த்தி: கூடு பா முல்லை
தனம்: ஐயோ மாமா அவ உங்களை கூப்பிடல, அவக கதிர் மாமாவை
கூப்பிடு றா. எல்லோரும் பாரு டா என்றார்கள் நக்கலாக.
ஜீவா: பார்த்தியா மீனா நீ என்னடான்னா என்னை அவன் இவன் என்று கூப்பிடுற ,,,
கண்ணா: முதல்ல குட்டி அண்ணி உன்னை ஏங்கன்னு கூப்பிட சொல்லு அப்புறம் மாமான்னு கூப்பிடலாம்.
மீனா ஜீவாவை பார்த்து முகத்தை சுழித்து கொண்டாள்
லட்சுமியம்மா:அப்படி அந்த பைல்ல எண்ணா தான்டா இருக்கு?
முல்லை அந்த பையில் இருந்து எல்லா போட்டோவையும் எடுத்து
காட்ட.. அதில் ஜீவா,மீனா ஜோடியாகவும், மூர்த்தி,தனம்
ஜோடியாகவும் மற்றொன்றில் அனைவரும் அம்மா கண்ணாவுடன்
இருப்பது போலவும் இருந்தது, அனைவரும் அதை பார்த்து மிகவும்
சந்தோஷம் அடைந்தனர்.
ஜீவா: மீனா நேற்று தான் உங்க போட்டோவை வைத்து ஒரு சண்டைய
இழுக்க இருந்தால், அப்புறம் நானே எங்க போட்டோவை ஒரு ஃப்ரேம்
போட்டு மாட்டிடனும்ன்னு நினைத்தேன் நல்ல வேலை நீயே பன்னிட்ட,இல்லன்னா என்னை தனியா ஃப்ரேம் பண்ணி மாலை பொட்டு இருப்பா,ஆமா இந்த ஐடியா எல்லாம் உனக்கு எப்படி வருது.
கதிர்: இல்ல அண்ணா நான் இல்ல ...என் வைரம் தான் இல்லை...இல்லை..முல்லை தான் ஐடியா தந்தா.
தனம்: பார்த்தீங்களா மாமா இதுநாள் வரை நீங்க கூட என்னை பெயர்
சொல்லிதான் கூப்பி டுவிங்க ,அனா இவங்கள பாருங்க
மீனா: ஆமாங்க இவரு முல்லை அழகி வைரம்ன்னு சொல்லுவதும்,முல்லை அவர மாமான்னு சொல்லு வதும் ரொம்ப டூ மச் (too much) சொல்லிட்டேன்.
மூர்த்தி: ஜீவா நீ வேணும்ன்னா மீனாவை அம்மு என்று கூப்பிடு.
கண்ணா: ஜீவா அண்ணன் கம்முன்னு இருந்தாலும் இருக்குமே தவிர,
குட்டி அண்ணிய அம்முன்னு மட்டும் சொல்லாது.
என்று கண்ணன் சொல்ல அனைவரும் மகிழ்ச்சியாக இருந்தனர்..