மருத்துவமனையா ? ஏன் என்ன ஆச்சு இவருக்கு எதாவது உடம்புக்கு முடியாமல் போய்விட்டதோ என்று யோசிக்க...ஒருவேளை வேற எதாவது பிரச்சினை இருக்குமோ? என்று மனதுக்குள் கேள்வி எழுப்பிவிட்டு மீண்டும் அவனிடமே கேள்வியை திணிக்க "என்னங்க என்ன ஆச்சு" என்றபடி சிறு அழுத்தத்தோடு கேட்க அவனோ "நான் மேகாவோட வந்திருக்கேன்..அது வந்து" என்று ஏதோ சொல்ல நினைத்துவிட்டு நிறுத்தியதன் காரணம் இவளுக்கு விளங்கவேயில்லை..
"மேகாவோட உங்களுக்கு மருத்துவமனையில் என்ன வேளை"? என்று சந்தேகத்துடன் கேட்க ,எங்கு அவள் மனது ஏதேனும் தப்பாக சிந்தித்து விடுமோ என்ற பதற்றத்தில் "ஒன்னுமில்லை அம்முலு எல்லாம் நம்ப விஷயமா தான் வந்திருக்கேன்" என்று அமுதன் கூறவே சற்று சமாதானம் ஆனவளாக மூச்சு இரைத்தப்படி "சரி சரி நேரடியாக விஷயத்துக்கு வாங்க"என்று கூறவும் மருத்துவமனையில் டாக்டர் அமுதனை அழைக்கவும் சரியாக இருந்தது.
"வாங்க மிஸ்டர் அமுதன். மேகா என்கிட்ட எல்லா விஷயமும் சொன்னா"என்றபடி மருத்துவர் பேச்சை ஆரம்பித்தார்.
"ஆமா டாக்டர் கிட்டத்தட்ட மூன்றரை வருஷம் ஆச்சு. ஐ.வி.எப் பண்ணியும் எங்களுக்கு குழந்தை நிக்கவில்லை,என் தமிழ்ச்செல்வி இதை நினைச்சு நினைச்சு நிறைய சந்தோஷத்தை இழந்துட்டா..எப்படியாவது ஒரு கரு அவளோட வயிற்றில் உருவாகினா நல்லாயிருக்கும்." என்று தன் வேதனையை சொல்லி முடிக்க விஷயத்தை காதில் வாங்கிய மருத்துவர்.
"அமுதன்..நான் மேகாவுக்கு மெடிக்கல் காலேஜில் ப்ரொபஸராக இருக்கேன். எனக்கு வயசு 58 ஏதோ என்னோட அனுபவத்தில் உங்களுக்கு சில ஆலோசனைகள் சொல்றேன் கேளுங்க""சொல்லுங்கள் சார்" என்றபடி அவரையே கண்கொட்காமல் பார்த்துக்கொண்டிருந்தான் அமுதன். இதற்கிடையில் மேகா அந்த இடத்தை விட்டு நகர்ந்தாள்.
"மிஸ்டர் அமுதன். உங்களுக்கு உந்துதல் சக்தி கம்மி னு ரிப்போர்ட் சொல்லுது. ஆனால் உங்களுக்கு விந்தணுக்கள் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. ஒன்று இல்லைனாலும் இன்னொனு முந்திச்செல்ல வாய்ப்பு இருக்கிறது. இந்த மாத்திரை மருந்து இதையெல்லாம் தாண்டி சில விஷயங்களை கடைப்பிடிக்கணும். நல்ல ஆரோக்கியமான உணவு,காய்கறிகள் பழங்கள் ..முக்கியமா செவ்வாழை பழம் ரொம்ப நல்லது. பிறகு மாதுளை இதெல்லாம் எடுத்துக்கணும்...தினமும் காலை அல்லது மாலை வாக்கிங் போகனும். அப்றம் தேவையற்ற மன உளைச்சல் தவிர்க்கனும்,வாரம் இருமுறையாவது உங்கள் மனைவியோடு உறவாடனும்..நான் சொல்றது உங்களுக்கு.....
KAMU SEDANG MEMBACA
காரிகையின் கனவு (Completed Novel)
Fiksi Umumஇந்த கதையை பற்றி சொல்லவேண்டும் என்றால். இது அழகான ஒரு குடும்பக்கதை. கணவன் மனைவிக்கு இடையே உள்ள அன்பு ,காதல் பறிமாற்றங்கள் மற்றும் குழந்தையில்லா தம்பதியின் போராட்டம்... ஒரு சாதாரண பெண்ணின் கனவு இவை தான் கதை. படித்து பாருங்கள் கதை உங்களுக்கு பிடிக்கும...