4

594 27 1
                                    

அந்த குடுகுடுப்புக்காரனின் பேச்சை தன் செவிகளில் வாங்ஙியப்படி குளிர்சாதன பெட்டியில் இருக்கும் தண்ணீரை எடுத்து பருகலானாள்.
என்னவோ சொன்னாரே "அதற்கான காலம் இன்னும் வரவில்லை" என்று அப்படியானால் காலம் கைக்கூடும்போது நான் தாய்மை அடைவேனா?"என்பது போல் மனதிற்குள் வினா எழுப்பியப்படி அமர்ந்தாள்..
தூக்கத்தில் பக்கத்தில் இருக்கும் தன் மனைவி மீது கைபோட நேர்ந்தபோது தான் தெரிந்தது அவள் எழுந்துவிட்டாள் என்று கண்களை கசக்கியபடி சுற்றிமுற்றி பார்த்தான்.
"அம்முலு" என்றழைக்க அவனுடைய குரலில் தெளிந்தவள் "இதோ தண்ணீர் குடிக்க எழுந்தேங்க வந்திடுறன்" என்றபடி விருவிருவென நடந்தாள்.

"என்ன ஆச்சு நல்லா தானே தூங்கிட்டு இருந்த?" என்றான் அமுதன்.

"குடுகுடுப்புக்காரனின் சத்தம் விழிப்பை ஏற்படுத்தியது அதான் எழுந்து தண்ணீர் பருகிவிட்டு படுக்கலாமேனு" என்று முகத்தை பாவமாக வைத்துக்கொண்டு கூற அவனும் கிளிகிளித்தவாறே "சரி சரி தூங்கு, நீ சட்டென்று காணோம் னு பதறிட்டேன்" என்று சொல்லி முடித்துவிட்டு அவனும் படுத்தான். இருவரும் ஒருவர் மீது ஒருவர் கை போட்டப்படி உறங்கினர்.

பொழுது விடிந்ததும் நம்முடைய கதாநாயகி தமிழ்ச்செல்வி எழுந்து வீட்டுவாசலில் தண்ணீர் தெலித்து கோலமிட கோலமாவை எடுக்க வந்தபோது குமரனின் காலை தெரியாமல் மிதித்து விட "அய்யோ அண்ணி என் காலு" என்று கத்த "சாரி டா குமரா"என்றுரைக்க.. குமரனின் கத்தலில் அமுதன் எழுந்துவிட வெடுக்கென்று எழுந்து தலையனையை எடுத்துக்கொண்டு அறைக்குச் சென்று மீண்டும் உறக்கத்தை தொடர்ந்தான்.

இவள் கோலமிடும் போது பக்கத்து வீட்டு பங்கஜம் மாமியும் வெளியே பெரியதாக கோலமிட்டுக்கொண்டிருக்க அதை கண்டவள் "என்ன மாமி இன்னைக்கு கோலம் நீண்டலாக இருக்கு"என்று பேச்சை துவங்க "அதான் சொன்னேனே டி மா,மகளுக்கு வலைகாப்பு னு"என்று சொல்லி முடிக்க..
"ஐயோ ஆமா ! இன்னைக்கு இதுக்கு வேற போகனுமே" என்று யோசித்தவள். வேகவேகமாக அமுதனுக்கு சாப்பாடு கட்டிகொடுத்துவிட்டு குமரனை கல்லூரி விஷயமாக வெளியே அனுப்பி விட்டு தர்மலிங்கத்தை அழைத்துக்கொண்டு அந்த விழாவுக்கு சென்றாள்.

காரிகையின் கனவு (Completed Novel)Where stories live. Discover now