15

393 20 1
                                    

அமுதனுக்கு எல்லாம் புரிந்தது இது வெறும் அவளுடைய தடுமாற்றமே என்று..
"மேகா உனக்கு இருக்கிற இந்த தடுமாற்றம் எல்லாருக்குமே உன் வயதில் இருந்தபோது வந்திருக்கலாம்..இங்க பாரு இதெல்லாம் திடிரென என்கூட பழகுறது காரணமாக வந்த குழப்பம் தான். என்கூட தான் க்ளோஸா பழகுறதா நீ சொன்ன இல்லையா! இதற்கு காரணம் என்னிடம் உனக்கு இருக்கும் அந்த பாதுகாப்பு உணர்வு மற்றவர்களிடம் உனக்கு கிடைக்காமல் போயிருக்கலாம்"என்று அவளுக்கு அறிவுரை கூற அதை ஏற்று கொண்டவள் போல் தலையசைத்து விட்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்தாள். அவனும் சற்று இளைப்பாற மொட்டை மாடியிற்கு வந்தான்.

'தமிழு உன்னை மாதிரியே ஒரு நல்லவளை இந்த ஊரில் நான் பார்த்துட்டேன்..ஆனால் அவள் வெறும் தோழியே'என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டான். சற்று நேரத்தில் மழை தூவ ஆரம்பித்தது. மாடியில் உலர்த்திய துணிகளை எடுக்க வந்தாள் மேகா...

இன்னும் மழைத்தூரலில் நினைந்து கொண்டிருக்கும் அமுதனை பார்த்து "மிஸ்டர் அமுதன் உள்ள வாங்க ஏன் மழையில் நனையிறிங்க" என்று பிடித்து இழுக்க...கையை உதறியவன் "மழையில் நனையாத வாழ்க்கை எல்லாம் ஓர் வாழ்க்கையா..இதெல்லாம் அனுபவிக்கனும் மேகா" என்றபடி முகத்தை மேல்நோக்கி வானத்தை பார்த்தபடி மழையில் நினைய மேகாவோ கையில் இருந்த துணிகளை ஓரமாக வைத்துவிட்டு தானும் நனைந்தாள்.

அவள் நனைய நனைய அவள் மனதில் இருந்த குழப்பங்களும் நீரோடு நீராக கரைந்து போனது...சிறிது நேரத்தில் மழைவிட்டுபோக மேகா அமுதனருகே வந்து "அமுதன் இனிமே நீங்க எனக்கு ஒரு நல்ல ப்ரண்டு.. என்ன ஓகேவா" என்று கைகளை நீட்ட அவனோ புன்னகையித்தபடி அவள் கைகுலுக்கி ப்ரண்ட்ஸ் என்று கூற இருவருக்கும் இருந்த நட்பு இன்னும் வலுப்பெற்றது.

........
'மும்பையில் பலத்த மழை பெய்யக்கூடும்' என்ற செய்தியை டிவியில் பார்த்தவள் அவனுக்கு போன் செய்தாள் தமிழ்ச்செல்வி "என்னங்க மும்பையில் மழையாமே..பார்த்துங்க ரொம்ப நனையாதிங்க ஜலதோஷம் பிடிச்சிரும்" என்று கரிசனத்தோடு கூற அதை கேட்டு சிரித்தவன்
"என்னடி நீயும் மேகா மாதிரியே சொல்ற" என்று எதர்ச்சையாக மேகாவின் பெயரை பயன்படுத்த அவளுக்கு ஒன்றும் புரியவில்லை..

காரிகையின் கனவு (Completed Novel)Where stories live. Discover now