மீரா எழுந்ததும் வீட்டில் அனைவரும் திருவிழாவாக கொண்டாடினர். ஒரு வாரத்தில் மீரா நன்கு குணமடைந்திருந்தாள். அனைவரும் நான் நீ என்று அவளை கவனிக்க மீரா தான் தினறி போனாள். விஜய் தான் அவளை பார்த்துக்க போவதாக கூறி அவளை அவனுடனே வைத்துக் கொண்டான். மதியையும் மறக்காமல் கவனித்துக் கொண்டனர்.மீரா சரி ஆனதும் மதியை கவனித்துக் கொள்வதாக கூறி அவளுடனே இருந்தாள். அப்பப்போ விஜயின் காதலிலும் தன்னை தொலைக்கவும் செய்தாள்.
இன்னும் ஒரு வாரத்தில் விஜய் மீரா திருமண ஏற்பாடு செய்திருந்தனர். திருமண நாளும் வர மணமகள் அறையில் மீராவை மதி நிவி தியா மூவரும் மீராவை கிண்டல் கேலியுடன் தயார் செய்துக் கொண்டிருந்தனர். அப்பொழுது மதி அம்மா உள்ளே வர மதி முகத்தை திருப்பிக் கொள்ள மீரா எழுந்து அவர் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்க "என்ன மன்னிச்சிரு மா" என்று அவர் வருத்ததுடன் கூற அய்யோ அத்த நா எப்பவோ எல்லாத்தையும் மறந்துட்டன் அத விடுங்க மதி அத்த கிட்ட பேசு என்று மீரா கூற மதியும் அவருடன் பேச தொடங்கினாள்.
மணமகன் அறையில் ஆரவ் விஜயை "மச்சான் நா வேணா மேக்கப் போடவா நீ கூட பார்த்தியே அருண் கல்யாணத்துக்கு அருண் எவ்வளவு அழகா இருந்தான் நா பன்ன மேக்கப்னால" என்று கூற
"வேணா டா நா ரெடி ஆகிட்டன் நீ என்ன எதும் பன்ன வேணா" என்று விஜய் மறுக்க
"அப்படி எல்லாம் உன்ன விட முடியாது என் கையால உனக்கு மேக்கப் போட்ட அப்பறம் தான் மேடைக்கு உன்ன கூட்டின்னு போவன் இல்ல உன்ன வெளியேவே விட மாட்டன்" என்று ஆரவ் கதவின் அருகில் நின்று கொண்டான்.
"டேய் ஏன் டா இப்படி அவன படுத்தற" என்று அருண் கேட்க
"என் கல்யாணம் தான் ஒரு சோகத்துல நடந்துருச்சி உங்களுக்காச்சி நல்ல மேக்கப் போட்டு கொண்டாடலான்னா விட மாட்ரிங்க"
"ஏன் நீ போட்டுக்க வேண்டியது தான" என்று அருண் கேட்க
"மச்சான் ஏற்கனவே என் பின்னால நெறய பொண்ணுங்க சுத்துறாங்க இதல மேக்கப் போட்டுன்னு வெளியே போய் என்ன எல்லாரும் கண்ணு வச்சிட்டா"