வரம்-28

1.7K 67 9
                                    

அனைவரும் உண்டு விட்டு உறங்க சென்று விட தருண் கைபேசி அலறியது அதை தருண் எடுக்க

"தருண் காலேஜ்ல இருந்து வீட்டுக்கு போற வழில வண்டி பஞ்சர் ஆய்டுச்சி தனியா இருக்க எனக்கு பயமா இருக்கு தருண் சீக்கிரம் வா ப்லீஸ்" என்று நிவி கூற

"ஏய் லூசு இவ்வளவு நேரம் வீட்டுக்கு போகாம என்ன பன்னிட்டு இருந்த காலேஜ்ல" என்று தருண் கோபமாக கேட்க

"இன்னைக்கு கல்சுரல் தருண் அதான் லேட் ஆய்டுச்சி சீக்கிரம் வா தருண்" என்று நிவி பயத்தில் கூற

"வரன் டி எங்க இருக்க கரெக்ட் லொக்கேசன் சொல்லு" என்று தருண் போனை காதில் வைத்தவாறு  வண்டியை எடுத்துக் கொண்டு புறப்பட்டான் . நிவி அவள் இருக்கும் இடத்தை சொல்ல தருண் அங்கு சென்றான்.

தருண் நிவி சொன்ன இடத்திற்க்கு செல்ல அங்கு வெறும் வண்டி மட்டும் இருக்க தருணிற்க்கு சற்று பதட்டம் ஏற்பட்டது வண்டியை நிறுத்தி விட்டு சாலையின் இரு புறமும் திரும்பி பார்க்க வெற்று பாதையாக இருந்தது. நிவி வீட்டிற்க்கு செல்லும் பாதையில் தருண் வண்டியை எடுத்துக் கொண்டு செல்ல பத்து அடி தூரத்தில் நிவி காலேஜ் பேக் விழுந்து இருக்க அதை எடுத்தவன் அதே ரோட்டில் வேகமாக சென்றான்.

சற்று தொலைவில் நிவியை சுற்றி நான்கு ஆட்கள் இருக்க நிவி கீழே அமர்ந்தவாறு அவர்களிடம் கையெடுத்து கும்மிட்டு கெஞ்சிக் கொண்டிருந்தாள். தருண் அவர்கள் அருகில் சென்று வண்டியை நிறுத்தி விட்டு நிவி என்று அழைத்துக் கொண்டு அவள் அருகில் அமர்ந்தான். நிவி தருணை கண்டதும் அணைத்துக் கொண்டு "தருண் பயமா இருக்கு என்ன கூட்டிட்டு போ தருண் பயமா இருக்கு" என்று பிதற்ற தருண் அவள் தலையை வருடி "ஒன்னும் இல்ல டா அதான் நா இருக்கன் இல்ல கூட்டிட்டு போறன் ஒன்னும் இல்ல பயப்படாத" என்று கூற


நால்வரில் ஒருவன் "டேய் யார் டா நீ வந்த கட்டி புடிச்ச கூட்டிட்டு போறங்கற ஒழுங்கா அவளை ஒப்படைச்சிட்டு உயிரோட போற வழிய பாரு" என்று கூற தருண் நிவியை விலக்கி எதும் பேசாமல் கையை பிடித்து நிவியை எழுப்ப நிவி எழுந்து தருண் பின்னால் ஒழிந்துக் கொண்டாள்.

கேட்கா வரமடா நீDonde viven las historias. Descúbrelo ahora