வரம் - 20

1.9K 78 2
                                    

மறுநாள் காலையில் விஜய் சொன்னது போல் ரெஜிஸ்டர் ஆப்பிஸ்ஸில் விஜய் மீரா இருவரும் மாலை மாற்றிக் கொண்டு சட்டப் படி கார்த்தி , மதி அம்மா மதி மூவரும் இல்லாமல் மற்றவர்கள் முன்னிலையிலும் பதிவு செய்தனர். அருண் தாலி கட்ட சொல்ல ஊர் முன்னால் தான் கட்டுவேன் என்று கூறி விட்டு ஓரு செயினை அவளுக்கு அணிவித்தான். மேலும் இது அவர்கள் இருவருக்கும் தெரியக் கூடாது என்றும் கூறினான். அவர்களும் சரி என்று கூற அனைவரும் அருண் திருமண ஏற்பாட்டு செய்ய சென்றனர்.

திருமண ஏற்பாடுகள் பரபரப்பாக நடக்க அந்த நாளும் முடிந்தது அடுத்த நாள் ஆரவை அவன் பெற்றோர் கோவில் செல்ல வேண்டும் என்று கூற அவனும் சரி என்று அவர்களுடன் சென்றான். கோவில் சென்று இறங்க அங்கு மீரா வாயிலில் நின்றிருந்தாள். அதை கண்டவன் அவள் அருகில் செல்ல போக மீரா வேகமாக ஆரவ் அம்மாவிடம் சென்று

"அம்மா அவங்க எல்லாம் வந்துட்டாங்க வாங்க சீக்கிரம்" என்று மீரா அவர்களை அழைக்க

"யார் மா யார பார்க்க வந்திங்க" என்று ஆரவ் கேட்க

"உனக்கு பொண்ணு பார்க்க போறோம் அவங்க தான் வந்துர்காங்க" என்று ஆரவ் அம்மா கூற

"மா நான்தான் எனக்கு கல்யாணம் வேண்டான்னு சொல்ரன் இல்ல எதுக்கு இப்போ தேவ இல்லாம பொண்ணு பாக்கரிங்க" என்று ஆரவ் கோபமாக கேட்க

"அருணும் உன் கூட படிச்சவன் தான அவனுக்கு இன்னும் இரண்டு நாள்ல கல்யாணம் உனக்கு அருண் கல்யாணம் அப்போ எங்கேஜ்மென்ட் அவ்வளவு தான் பொண்ண பத்தி ஒன்னும் நினைக்காத அவ நல்ல பொண்ணு மீரா பார்த்தவ நல்லவளா தான் இருப்பா இப்ப பேசாம உள்ள வா" என்று அவன் அம்மா கூற

பொண்ணு பார்க்க வந்ததுக்கே கோவம் கொண்டவன் இப்பொழுது இரண்டு நாளில் நிச்சையம் என்று சொன்னதும் கோவத்தின் உச்சிக்கு சென்றவன் "எனக்கு பொண்ணு பார்த்து கல்யாணம் பன்ன இவளுக்கு என்ன உரிமை இருக்கு இவ சொன்னான்னு நீங்களும் கிளம்பி வந்துட்டிங்க இப்பவே அவங்க கிட்ட இந்த கல்யாணம் நடக்காதுன்னு சொல்லிறன்" என்று வேகமாக உள்ளே நுழைத்தான் ஆரவ்.

கேட்கா வரமடா நீWhere stories live. Discover now