வரம் -3

3.5K 119 11
                                    

"உன் கண்கள் கலங்க என் நெஞ்சம் வலிப்பதேனோ அன்பே!
உன் புன்னகை காண வரம் தருவாயோ!"

"உன்ன பார்த்து ஒரு வாரம் ஆகுது உன்னோட கலங்கன கண்ணு என்ன எந்த வேலையும் செய்ய விட மாட்டிந்து சீக்கிரம் நேர்ல பார்த்து உன் கிட்ட இந்த கிப்ட் குடுத்துட்டு உன் சிரிப்ப பாக்கனும் டி" என்று அவளுக்காக விஜய் தன் கையால்  செய்த கிப்டை பார்த்து பேசிக்கொண்டு இருந்தான்.

"மச்சான்" என்று அருண் அழைக்க
"சொல்லு மச்சான்" என்று விஜய் அருணை பார்த்து கேட்க
"என்ன டா பன்ற தனியா சிரிச்சிட்டு இருக்க உடம்பு எதும் சரியில்லையா" என்று அருண் அக்கரையாக கேட்க விஜய் சிரித்துக் கொண்டே "அது எல்லாம் ஒன்னும் இல்ல டா உடம்பு நல்லா தான் இருக்கு" என்று விஜய் கூற

"ஆமா மச்சான் உடம்புக்கு ஒன்னும் இல்ல ஆனா மனசு தான் இங்க இல்ல அப்படி தான மச்சான்" என்று கேட்டுக் கொண்டே ஆரவ் வந்து சேர்ந்தான்.

"டேய் அப்படி எல்லாம் இல்ல டா " என்று விஜய் மறுக்க "அப்போ இந்த கிப்ட் யார்க்கு எதுக்கு ?" என்று ஆரவ் விஜய் கையில் வைத்திருந்த கிப்டை காட்டி கேட்க "அது ....வந்து.....இது...." என்று விஜய் திக்கி தினறிக் கொண்டிருந்தான்.

"டேய் விடு டா அவனே கன்பூஸ்ல இருக்கான் தெளிவானா அவனே சொல்லுவான் " என்று அருண் கூற "சரி ஏதோ சொல்ற ஒத்துக்கரன்" என்று ஆரவ் கூற

"உங்க கிட்ட மறைக்கிற அளவுக்கு ஒன்னும் இல்ல டா அவள எனக்கு பிடிச்சிருக்கு துருதுருன்னு எதையோ தேடற கண்ணு டா அவளுது அந்த கண்ண நா கலங்க வச்சிட்டன் டா கஷ்டமா இருக்கு" என்று விஜய் சோகமாக கூற "டேய் யார் டா அது எதுக்கு அழுக வச்ச" என்று ஆரவ் ஆர்வமாக கேட்க

"உன் லவ் ஸ்டோரிய அப்பறம் கார்ல கேட்டுக்கோ இப்போ வா போலாம்" என்று அருண் அழைக்க விஜய் "எங்க டா " என்று கேட்க "எங்க வீட்டுக்கு அம்மா கூப்டாங்க இரண்டு பேரும் காலேஜ் படிக்கும் போது வந்தது இப்ப வந்தே ஆகனுன்னு கூப்டாங்க"என்று அருண் கூற

கேட்கா வரமடா நீWhere stories live. Discover now