வரம்-8

2.3K 94 7
                                    

ஆரவ் என்று தியா அழைக்க "ம்ம்" என்று மட்டும் ஆரவ் கூற "என்ன ம்ம் ஒழுங்கா தான் பேசன்" என்று தியா கோவமாக கேட்க "என்ன பேச" என்று ஆரவ் சலிப்பாக கேட்க "எதுக்கு இப்போ என் கிட்ட இருந்து விலகி போற" என்று தியா கேட்க "அப்படி எல்லாம் எதும் இல்ல" என்று ஆரவ் கூற கடுப்பான தியா "வண்டிய நிறுத்து" என்று கூற "எதுக்கு" என்று ஆரவ் புரியாமல் கேட்க "நிறுத்து" தியா கத்த ஆரவ் வண்டியை நிறுத்தினான்.

உடனே தியா இறங்கி ஆரவ் முன்  சென்று நிற்க "என்ன பன்ற தியா நீ வண்டில ஏறு"என்று ஆரவ் கூற தியா ஏதும் கூறாமல் அவனையை பார்க்க ஆரவ் "தியா ஏறு டைம் ஆச்சி லேட் ஆகுது விஜய் வீட்டுக்கு போய்ட போறான் அப்பறம் தேவ இல்லமா சந்தேகம் வரும்" என்று ஆரவ் பதட்டமாக கூற "வரட்டும் அப்போவாச்சி என் காதல் எல்லாருக்கும் தெரியட்டும்" என்று தியா கூற

"லூசா டி நீ நா எத்தன டைம் சொல்றது நா உன்ன லவ் பன்னலன்னு தேவ இல்லாம கற்பன பன்னிக்காத வண்டில ஏறு" என்று ஆரவ் கூற "லவ் பன்னாம தான் என்ன டி போட்டு பேசற என் மேல உரிமயா பேசற இல்ல" என்று தியா கேட்க "என் பொறுமைய ரொம்ப சோதிக்கதா தியா வண்டில ஏறு" என்று ஆரவ் கூறி வண்டிய எடுக்க போக தியா சாவியை எடுத்துக் கொள்ள ஆரவிர்க்கு கோபம் வர தியாவை கன்னத்தில் அடித்து விட்டான்.

தியா கண் கலங்கி விட "ஒழுங்கா வண்டில ஏறு இல்ல வர கோவத்துக்கு என்ன பன்னுவனே தெரியாது" ஆரவ் கூற மறுப்பு பேசாமல் ஏறினாள் தியா. பயணம் அமைதியாக போக தியா இறங்க வேண்டிய இடமும் வந்தது. எதும் பேசாமல் அமைதியாக தன் அறைக்குச் சென்று விட்டாள். விஜய் வெளியில் செல்ல கண்களை துடைத்தவாறு அவ்விடத்தை விட்டு சென்றான் ஆரவ் விஜய் அதை கண்டு விட்டு தன்னறைக்கு சென்றான்.

"ஏன் டா உனக்கு என்ன புடிக்கல என் லவ் உனக்கு புரியலயா இல்ல புரிஞ்சும் நடிக்கிறியா என்னால முடியல டா இன்னும் ஒரு வருஷத்துல எனக்கு கல்யாணம் பன்ன பாப்பாங்கலே அப்போ என்ன சொல்லி நிறுத்துவன் உன்ன மனசுல நினைச்சிட்டு வேற ஒருத்தன எப்படி டா கல்யாணம் பன்ன அப்படி நடக்கறதுக்குள்ள நா செத்துறுவன் டா நீ இல்லாத லைப் நா வாழ மாட்டன் டா" என்று கதவில் சாய்ந்து அமர்ந்து முகத்தை கால்களுக்கு இடையில் வைத்து அழ தொடங்கினாள்.அழுது சோந்து போக அப்படியே உறங்கியும் போனாள்.

கேட்கா வரமடா நீحيث تعيش القصص. اكتشف الآن