வரம் - 7

2.4K 96 4
                                    

மீரா அங்கு செல்ல அங்கே விஜய் முதுகு காட்டியபடி நின்றிருந்தான். மீரா அவன் அருகில் சென்று விஜி என்று அழைக்க விஜய் திரும்பி பார்த்தான். மீரா முதன்முதலில் விஜய் வாங்கி கொடுத்த சுடியை அனிந்து தலைக்கு குளித்த முடியை கொஞ்சமாக எடுத்து கிளிப் போட்டு மீத முடியை விரித்து விட்டு ஒரு கையில் வளையில் மறு கையில் வாட்ச் காதில் தொங்களுடன் ஜிமிக்கி கம்மல் காற்றில் அவள் முகத்தில் படரும் முடி கழுத்தில் மெலிதாக ஒரு செயின் கண்ணில் மை வைத்து மகிழ்சியில் மின்ன உதட்டில் சிறு புன்னகை என்று அவன் கண்களுக்கு தேவதையாக தெரிந்தாள்.

மீரா அவனை அழைத்து பதில் வராமல் போக விஜயை உழுக்கினாள். சுயநினைவு வந்தவன் "சொல்லு மீரு " என்று கூற "எந்த உலகத்துல இருக்க விஜி எவ்வளவு நேரம் கூப்ரது " என்று மீரா கூற "இன்னைக்கி நீ ரொம்ப அழகா இருந்தியா அதான் என் கண்ணு உன்ன விட்டு எங்கையும் போகல நா நானாவும் இல்ல " என்று விஜய் கூற "போதும் போதும் காமெடி பன்னாத நா இன்னைக்கி ரொம்ப ஹாப்பியா இருந்தன் தெரியுமா அது எல்லாம் நீ தான பன்ன ரொம்ப ரொம்ப தாங்க்ஸ் விஜி இந்த மூன்று வருஷம் தான் நா ஹாப்பியா இருக்கன் இப்ப நீயும் என் கூட இருக்க இப்ப செத்தா கூட நா" முடிப்பதற்குள் விஜய் அவள் கன்னத்தில் அறைந்தான்.

கன்னத்தில் கை வைத்துக் கொண்டு மீரா விஜியை பார்க்க "இனிமே செத்துறுவன் அது இதுன்னு சொன்ன அவ்ளோதான் நானே கொன்றுவன் பாத்துக்க இன்னும் ரொம்ப வருஷம் நீ என் கூட வாழனும் உன்கைய புடிச்சி ரொம்ப தூரம் ட்ராவல் பன்னனும் உன்ன நிறய லவ் பன்னனும் இனி இப்படி பேசன அவ்ளோ தான் சொல்லிட்டன் நியாபகம் வச்சிக்க அதையும் மீறி உனக்கு எதாச்சினா நானும் உயிரோட இரு.... "அவன் முடிப்பதர்க்குள் மீரா அவன் வாய் மேல் கை வைத்து தடுத்தாள்.கண்களில் நீர் மட்டும் வந்த வண்ணம் இருந்தது.

"சாரி விஜி இனி நா அப்படி சொல்ல மாட்டன் நீயும் அப்படி பேசாத" என்று மீரா அழுத வண்ணம் கூற விஜய் அவள் கண்ணீரை துடைத்து விட்டு அவள் கன்னத்தை தன் இரு கைகளிலும் பிடித்து "சாரி மீரு நீ அப்படி சொன்னதும் கோவம் வந்துச்சி அதான் அடிச்சிட்டன் சாரி டா" என்று கெஞ்ச ."சரி விடு விஜி  வா போலாம் எல்லாரும் வெய்ட் பன்னுவாங்க" என்று கூறி முன்னே ஓடி விட  விஜய் பின்னே சென்றான்.

கேட்கா வரமடா நீWhere stories live. Discover now