வரம்-37

1.7K 66 1
                                    

மீரா அறைக்கு வெளியில் ரேஷ்மா கால் மேல் கால் போட்டு கொண்டு அமர்ந்து இருக்க அதை கண்ட விஜய் வேகமாக மீரா அறை கதவை திறந்து உள்ளே சென்றான். மீரா சுவாசம் சீராக இருப்பதை பார்த்த பிறகு தான் விஜய் மூச்சை விட்டான்.

மீராவை பார்த்த பிறகு விஜய் வெளியில் வர அவனுக்காக காத்திருந்த ரேஷ்மா "என்ன விஜய் அவளை கொன்னுட்டன்னு நினைச்சியா அவ தான் படுத்த படுக்கையா ஆகிட்டாளே இதுக்கு மேல அவள கொள்ள எனக்கு மனசு வரல காலம் பூரான் அவ இப்படி தான் இருக்க போறா" என்று கூற

"ஏய் ச்சீ வாய மூடு உன் மேல தான் நாங்க கம்ப்ளைன்ட் குடுத்தனே போலீஸ் உன்ன சும்மா விட மாட்டாங்க" என்று விஜய் கோவத்தில் கத்த

"ஏய் ஏய் விஜய் இது ஹாஸ்பிடல் கத்தாத என்னன்னு கம்ப்ளைட் குடுத்த உன் காதலிய சாரி சாரி உன் ஆச பொண்டாட்டிய ரோட்ல தள்ளி விட்டன்னா உனக்கு இன்னொரு விஷயம் தெரியுமா அந்த லாரிய அடிக்க சொல்லி ஏற்பாடு பன்னதே நான் தான்" என்று கூற

"அதுவும் உன் ஏற்பாடு தானா இப்பவே பேலீஸ்ல சொல்ரன்" என்று விஜய் போன் செய்ய மறுமுனையில் சொன்ன செய்தியில் கோவத்தின் உச்சிக்கே சென்று விட்டான்.

போனை வைத்தவன் ரேஷ்மாவை முறைக்க "என்ன என்ன அரெஸ்ட் பன்ன முடியாதுன்னு சொல்லிட்டாங்களா" என்று கேலியாக கேட்க

விஜய் கோவத்தை கையை விரல்களை மூடி கட்டுப்படுத்திக் கொண்டிருந்தான்.

அதே நேரத்தில் குடும்பத்தினரும் வந்து சேர்ந்திட ரேஷ்மாவை கண்டவர்கள் கோவமாக அவள் அருகில் செல்ல பார்க்க கார்த்தி அவர்களிடம் இது மருத்துவமணை என்று அறிவுருத்தி அமைதியாக்கினான்.

"இங்க பார் ரேஷ்மா இங்க இருந்து போய்ரு இல்ல அநியாயமா உன் உயிர என் கையால இழக்க வேண்டிவரும்" என்று ஆரவ் சீர அருண் அதற்க்கு ஒரு பங்கு மேலே சென்று அவளை நோக்கி கழுத்தை நெறிப்பது போல் கையை கொண்டு போக தருண் அவனை தடுத்து அவன் கையை இறுக்கி பிடித்துக் கொண்டான்.

கேட்கா வரமடா நீOnde as histórias ganham vida. Descobre agora